காதல் ஜோடிகள் காவல் நிலையத்தில் தஞ்சம்!

Default Image

திருப்பத்தூர் மாவட்டம் கோயம்பேடு பகுதியில் வசித்து வந்தவர் சங்கர் இவரது மகன் அரவிந்தன் .மேலும் அதே பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் அவருடைய மகள் அர்ச்சனா அரவிந்தனும் அர்ச்சனாவும் வாணியம்பாடி அடுத்த ஜனதபுரம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வந்துள்ளனர்.

அப்பொழுது இந்த நட்பு காதலாக மலர்ந்தது இதனையடுத்து அர்ச்சனா பெற்றோருக்கு இந்த காதல் சேர்த்தே தெரியவந்தது, அவருக்கு வீட்டில் வேறு ஒருவருடன் அர்ச்சனாவிற்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்திருந்தனர் .இந்நிலையில் இதனை அறிந்த அரவிந்தன் கடந்த 17 ஆம் தேதி தனது நண்பர்கள் மற்றும் தனது உறவினர்கள் உதவியுடன் அர்ச்சனாவை ஆலங்காயம் அடுத்த தீர்த்தம் பகுதியில் உள்ள முருகன் கோவிலில் வைத்து திருமணம் செய்து முடித்தார்.

இவர்கள் இருவரும் சென்னையில் உள்ள தனது தனது நண்பர் வீட்டில் தங்கியுள்ளனர். மேலும்  இந்நிலையில் காதல் ஜோடிகள் தங்கள் பெற்றோரிடம் சமாதானம் செய்து சேர்த்து வைக்கும்படி வாணியம்பாடி நகர காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்து புகார் மனு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்