ரோஜாவுக்கு நீதி வேண்டும் ..! கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!

Default Image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சிறுவள்ளூர் கிராமத்தை சார்ந்தவர்  ரோஜா. இவர் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். இவர் காரை கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் ரோஜா கர்ப்பமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து  ரோஜா , ராஜேஷிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார். அதற்கு ராஜேஷ் சம்மதம் தெரிவித்து உள்ளார்.இதை அடுத்து ராஜேஷ் ஒரு வாரத்திற்கு முன்பு ரோஜாவை  அழைத்து சென்றதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் காஞ்சிபுரம் அடுத்து உள்ள பரந்தூர் கிராமத்தில் சசிகலா என்பவர் தோட்டத்தில் அடையாளம் தெரியாத பெண் சடலம் ஒன்று இருப்பதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறை உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில் இறந்து கிடந்த பெண் சடலம் ரோஜா என்பது தெரியவந்தது.
பின்னர் ரோஜா பெற்றோருக்கு தகவல் தெரிவித்து உடலை பிரேத பரிசோதனைக்கு  காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த ரோஜாவின் உடலில் பல இடங்களில் சிகரெட்டால் சூடு வைக்கப்பட்டு கழுத்து நெரிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
ரோஜாவின் பெற்றோர்கள் மகளின் இறப்பிற்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என ரோஜாவின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் போராட்டம் நடத்தினர். பின்னர் இது தொடர்ந்து ராஜேஷை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் ராஜேஷ் திருமணமானவர் என தெரியவந்தது.  இழந்த ரோஜாவை காதலித்ததாகவும் , ரோஜா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்ததாகவும் அதற்கு தான் மறுப்பு தெரிவித்ததாகவும் ராஜேஷ் கூறியுள்ளார். கைது செய்யப்பட்ட ராஜேஷ் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு  வேலூர்  மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக சமூக வலைத்தளமான டுவிட்டரில் நெட்டிசன்கள் தொடர்ந்து பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர். அதில் ரோஜாவிற்கு நியாயம் வேண்டும் என பலர் பதிவிட்டு  வருகின்றனர். இதற்காக #JusticeForRoja என்ற ஹேஷ்டேக் மூலம் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Free bus for men - Minister Sivasankar says
Rajat Patidar fined
Governor RN Ravi - Supreme court of India - TN CM MK Stalin
AA22xA6
mk stalin - RN RAVI