சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ரோபோக்கள் கொண்டு மக்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கவும், அதன் மூலமே மக்களுடன் உரையாடவும் போலீசார் கண்காணிப்பு ரோபோக்களை களமிறக்கியுள்ளனர்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே இருக்கிறது. அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னையில்தான் அதிகளவில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகள் பல பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, அந்த பகுதிகளில் மக்கள் நடவடிக்கைகள் பற்றி தெரிந்து கொள்ள தற்போது சென்னை காவல்துறையினர் புதிய வழியை அறிமுகப்படுத்தியுள்ள.
அதன்படி, சென்னையில் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் ரோபோக்கள் கொண்டு கண்காணிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதில், கேமிரா மூலம் மக்களை கண்காணிக்கவும், அதன் மூலமே மக்களுடன் உரையாடவும் போலீசார் ரோபோக்களை களமிறக்கியுள்ளனர்.
முதன் முதலாக சென்னை, மயிலாப்பூரில் உள்ள கொரோனா பாதிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட அறிவிக்கப்பட்ட பகுதிகளில் ரோபோக்கள் மூலம் சென்னை போலீசார் கண்காணித்து வருகின்றனர். சென்னையில் நேற்று மட்டுமே 138 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி அங்கு கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 906-ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…