தினகரனிடம் ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் ஏமாந்துவிட்டார்கள்….!மற்ற தொகுதி மக்கள் ஏமாற மாட்டார்கள் …!அமைச்சர் சரோஜா

Default Image

18 எம்எல்ஏக்கள் வழக்கின் தீர்ப்பு வெளியான நிலையில் அமைச்சர் சரோஜா கருத்து தெரிவித்துள்ளார்.
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நேற்று (செப்டம்பர் 25 ஆம் தேதி) தீர்ப்பு வழங்கினார் 3வது நீதிபதி சத்யநாராயணன்.

அவர் வழங்கிய தீர்ப்பில்,18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்று தீர்ப்பு அளித்தார்.மேலும் அவர் கூறுகையில்,18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் சபாநாயகரின் உத்தரவு செல்லும் .சபாநாயகர் முடிவில் தவறு இல்லை.தகுதிநீக்கம் சட்டவிரோதமானது இல்லை என்று அதிரடியாக தீர்ப்பு வழங்கினார்.அதேபோல் 18 எம்.எல்.ஏக்களின் மனுக்களை தள்ளுபடி செய்தார் நீதிபதி சத்தியநாராயணன்.
Image result for டிடிவி

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜி வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தார்.அதேபோல் 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி உத்தரவு பிறப்பித்தார்.மேலும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையும் நீக்கியும் உத்தரவு பிறப்பித்தார்.
Image result for  அமைச்சர் சரோஜா

இந்நிலையில் 18 எம்எல்ஏக்கள் வழக்கின் தீர்ப்பு வெளியான நிலையில் அமைச்சர் சரோஜா கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், 18 எம்எல்ஏக்கள் வழக்கின் தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு ஆகும்.ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் ஏமாந்துவிட்டார்கள் .மற்ற தொகுதி மக்கள் ஏமாற மாட்டார்கள் 20 தொகுதிகளிலும் அதிமுக அமோக வெற்றி பெறும் என்றும்  அமைச்சர் சரோஜா தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்