சென்னை கே.கே.நகரில் தனியார் கல்லூரி ஒன்று உள்ளது. இந்தக் கல்லூரியில் அஸ்வினி என்ற மாணவி பயின்று வந்தார். இன்று மதியம் 3 மணி அளவில் கல்லூரி முடிந்தவுடன் வெளியே வந்துள்ளார்.
உயிரிழந்த மாணவியின் உடல், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.மாணவி அஸ்வினியின் உடல், பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது.
மாணவி ஒருவர் சென்னையில் கல்லூரி வாசலில் இளைஞரால் குத்திக்கொலை செய்யப்பட்டார். மாணவியை குத்திக்கொலை செய்த இளைஞரை பொதுமக்கள் தாக்கி போலீஸில் ஒப்படைத்தனர்.
சென்னை கே.கே.நகரில் தனியார் கல்லூரி ஒன்று உள்ளது. இந்தக் கல்லூரியில் அஸ்வினி என்ற மாணவி பயின்று வந்தார். இன்று மதியம் 3 மணி அளவில் கல்லூரி முடிந்தவுடன் வெளியே வந்துள்ளார்.
அப்போது இளைஞர் ஒருவர் மாணவியை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார், பின்னர் திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியை சரமாரியாக குத்தியுள்ளார். இதைப்பார்த்து அக்கம் பக்கம் உள்ளவர்கள் தடுக்க முயன்றும் சராமாரியாக குத்து வாங்கியதில் ரத்தவெள்ளத்தில் மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மாணவியை கத்தியால் குத்திய இளைஞர் தப்பி ஓடமுயன்றார். ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்த இளைஞரை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். இதில் பலத்த காயமடைந்த அவர் அங்கேயே மயங்கிவிழுந்தார்.
மாணவியை தனியார் மருத்துவமனைக்கு தூக்கிச்சென்றனர். ஆனால் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மாணவியை கத்தியால் குத்திய இளைஞர் பெயர் அழகேசன் என்பதும் மதுரவாயிலைச் சேர்ந்தவர் என்பதும் தெரிந்தது.
கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. காதல் விவகாரத்தில் இந்தக் கொலை நடந்துள்ளதாக கூறப்படுகிறது.பலத்த காயமடைந்த அழகேசன் அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
பின்னர் உயிரிழந்த மாணவியின் உடல், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.மாணவி அஸ்வினியின் உடல், பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…
பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…
சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…