நடுக்காட்டுப்பட்டிக்கு வந்து சேர்ந்தது ரிக் இயந்திரம்..!

Published by
Surya

திருச்சியில் உள்ள மணப்பாறையை அடுத்த  நடுக்காட்டுபட்டியில் வீட்டின் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது சிறுவனான சுர்ஜித், ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தான். நேற்று  மாலை  5.40 மணிக்கு விழுந்த சிறுவனை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுர்ஜித், முதலில் 26 அடியில் சிக்கி இருந்தார். பின்னர் 70 அடிக்கு சுர்ஜித் சென்றார். அதன் பின்னர், சுர்ஜித்  85 அடி தூரத்திற்கு சென்றார். தற்போது குழந்தை மேலும் 15 அடி இறங்கி 100 அடி ஆழத்தில் சென்றார்.
இதனை தொடர்ந்து, இந்த சிறுவன் மேலும், சுரங்கம் தோண்டி மீட்கும்போது அதிர்வில் குழந்தை கீழே சென்றுவிடாமல் தடுக்க ஏர் லாக் மூலம் சுர்ஜித்தின் கை இறுக்கமாக  பிடிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, அந்த சிறுவனை மீட்க, மக்களின் இறுதி நம்பிக்கையான ஓஏன்ஜிசி சார்பாக 8 கோடி மதிப்பிலான ரிக் இயந்திரம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்பொழுது, அந்த சுரங்கம் தோண்டும் இயந்திரமான ரிக் இயந்திரம், தற்பொழுது அங்கு வந்துள்ளது. தற்பொழுது இதனை பொருத்தும் பணி, தீவிரமடைந்தது.
அந்த இயந்திரம் மூலம், அணைத்து துறை வீரர்களும் முதலில் 1 மீட்டர் அகலத்திற்கு 100 அடிக்கு குழி தோண்டப்படும். அதன்பின், திறமைவாய்ந்த 3 தீயணைப்பு வீரர்கள் தக்க பாதுகாப்பு உடைகள் அணிந்து அந்த சிறுவனை மீது கொண்டு வருவார்கள்.

Published by
Surya

Recent Posts

ஒரு மணிநேரம் மட்டும்., மீண்டும் திறக்கப்பட்ட திரௌபதி அம்மன் கோயில்! பட்டியலின மக்கள் மகிழ்ச்சியுடன் சாமி தரிசனம்!

ஒரு மணிநேரம் மட்டும்., மீண்டும் திறக்கப்பட்ட திரௌபதி அம்மன் கோயில்! பட்டியலின மக்கள் மகிழ்ச்சியுடன் சாமி தரிசனம்!

விழுப்புரம் : சாதிய பாகுபாடு , அதனால் ஏற்பட்ட இருதரப்பு மோதல் காரணமாக 22 மாதங்களாக மூடி இருந்த திரௌபதி…

49 minutes ago

அமித்ஷா vs எடப்பாடி பழனிச்சாமி! 2026-ல் கூட்டணி ஆட்சியா? என்ன சொன்னார்கள்?

சென்னை : தமிழ்நாட்டில் பிரதான கட்சிகள் (அதிமுக, திமுக) கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து இருந்தாலும் , தேர்தல் முடிந்த…

1 hour ago

ஏப்ரல் 16 ஐபிஎல் “சூப்பர் ஓவர்” நாளா? மீண்டும் மீண்டும் அதே நாளில் டெல்லிக்கு நடந்த சம்பவம்!

டெல்லி : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…

2 hours ago

பரபரப்பாக மேட்ச்.., சூப்பர் ஓவரில் ராஜஸ்தானை வீழ்த்தி திரில் வெற்றி பெற்ற டெல்லி.!

டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.…

9 hours ago

நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!

நெல்லை : 2023ஆம் ஆண்டு நாங்குநேரியில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது, மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…

10 hours ago

மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!

டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…

12 hours ago