10 சதவீத இடஒதுக்கீடு விவகாரம்.! விரைவில் உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு.! திமுக அமைச்சர் துரைமுருகன் தகவல்.!

Published by
மணிகண்டன்

உச்சநீதிமன்றம் வழங்கிய இடஒதுக்கீடு குறித்த தீர்ப்புக்கு எதிராக மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என திமுக அறிவித்துள்ளது. 

மத்திய அரசு கொண்டு வந்த உயர் பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக திமுக உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த 5 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதி அமர்வு,  மத்திய அரசின் 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் தீர்ப்பு வழங்கினர். இதில் மூன்று நீதிபதிகள் இட ஒதுக்கீடு செல்லும் எனவும் இரண்டு நீதிபதிகளும் அதற்கு எதிராகவும் வெவ்வேறு விதமான தீர்ப்புகளை வழங்கினார். பெரும்பாலானது மத்திய அரசின் இட ஒதுக்கீடு செல்லும் தீர்ப்பு என்பதால் இறுதியாக அந்த தீர்ப்பை வழங்கப்பட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து திமுக சார்பில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பதிவிடுகையில், ‘  பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் 103 வது அரசியல் சட்ட திருத்தம் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது, ‘சமூக நீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு கால போராட்டத்தில் ஏற்பட்டுள்ள பின்னடைவு’ என பார்க்கிறோம். என குறிப்பிட்டு இருந்தார்.

உச்ச நீதிமன்ற நீதிபதி அமர்விலேயே இரண்டு விதமான தீர்ப்பு வந்துள்ளது. அதில் வழக்கமான நடைமுறைப்படி பெரும்பான்மை பெற்றுள்ள தீர்ப்பு இறுதி தீர்ப்பாக வெளிவந்துள்ளது.

திமுகவை பொருத்தவரை இந்த வழக்கு ஆணித்தனமான வாதங்கள் எடுத்துரைக்கப்பட்டது. ஆனாலும் அரசியல் சட்டத்தின் அடையாளத்தை அடிப்படை அம்சத்தை அழிக்கும் விதத்தில் ஒரு அரசியல் சட்ட திருத்தம் அமையக்கூடாது என்பதுதான் இதுவரை பல்வேறு உச்சநீதிமன்ற தீர்ப்புகளில் மேற்கோள் காட்டப்பட்ட பொன்மொழி ஆகும்.

நாட்டில் உள்ள 82% பழங்குடி, இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூக நீதியை காப்பாற்றிட, அரசியல் சட்டத்தின் அடிப்படை கூட்டமைப்பை பாதுகாத்திட, மண்டல் கமிஷன் தீர்ப்பின் வழங்கப்பட்டுள்ள இட ஒதுக்கீடு கொள்கையை நிலைநாட்டிட, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துக் கொள்கிறேன். என திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

Recent Posts

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

6 mins ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

9 mins ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

45 mins ago

தக் லைஃப் படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடிக்கு விற்பனையா?

சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…

58 mins ago

“விஜயகாந்த்துக்கு மரியாதை செலுத்தும் கிரிக்கெட் படம்” லப்பர் பந்து இயக்குநர்.!

சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…

1 hour ago

லட்டு விவகாரம் : “இதை வைத்து மத அரசியல் செய்கின்றனர்”! ஜெகன் மோகன் ரெட்டி பரபரப்பு பேட்டி !

ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…

2 hours ago