சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்ப பெறுங்கள் – ஜிகே வாசன்

Published by
பாலா கலியமூர்த்தி

கொரோனா பாதிப்பில் இருக்கும் மக்களின் நலன் கருதி சிலிண்டர் விலையை ஏற்றாமல் இருக்க வேண்டும் என ஜிகே வாசன் வலியுறுத்தல்.

சாமானிய மக்கள் பயன்படுத்தும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்ப பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், நேற்று ஒரு சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் ரூ.15 அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது அனைத்து தரப்பு மக்களையும் குறிப்பாக சாதாரண மக்களைப் பெருமளவு பாதிக்கும். தற்போதைய கொரோனா காலத்தில் வருமானம் போதுமான அளவில் கிடைக்காத சூழலில் அன்றாட வாழ்க்கைக்கே பொருளாதாரம் தேவையான அளவிற்கு இல்லை. அப்படி இருக்கும் போது சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை சமாளிப்பது சற்று கடினம் என தெரிவித்தார்.

எனவே, மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுடன் பேசி உயர்த்தப்பட்டுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சர்வதேச சந்தையின் விலை நிலவரத்தைக் காரணம் காட்டி, மாதந்தோறும் விலை உயர்த்தினால் அது சாமானிய மக்களுக்கு பெரும் சுமையாக அமையும்.

மக்களின் நலனை கருத்தில் கொண்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்ப பெறவும், இனியும் விலையேற்றப்படாமல் நிலைத்த தன்மைக்கும் உடனடி நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

”ஆங்கிலத்தில் கையெழுத்திடும் தமிழக அமைச்சர்கள்”.., தமிழில் போடக்கூடாதா? பிரதமர் மோடி கேள்வி.!

”ஆங்கிலத்தில் கையெழுத்திடும் தமிழக அமைச்சர்கள்”.., தமிழில் போடக்கூடாதா? பிரதமர் மோடி கேள்வி.!

ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…

12 hours ago

‘முடிவெடுப்பது நான் அல்ல’.., ஒருவழியாக ஓய்வு குறித்து மௌனம் கலைத்த தோனி.!

சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…

13 hours ago

டார்கெட் முடிக்காத ஊழியர்கள்… நாயை போல் அலைய வைத்து கொடுமைப்படுத்திய தனியார் நிறுவனம்.!

கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…

13 hours ago

“அவர்களுக்கு அழ மட்டுமே தெரியும்”.., யாரை சொல்கிறார் பிரதமர் மோடி.?

ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார்.  பாம்பனில் கடலுக்கு நடுவே…

14 hours ago

திறப்பு விழா அன்றே பழுது..! பிரதமர் மோடி திறந்து வைத்த பாம்பன் பாலத்தின் தற்போதைய நிலை என்ன?

ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…

15 hours ago

உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இந்த 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.!

சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…

17 hours ago