ஓய்வுபெற்ற நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா தேசிய பசுமை தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினராக நியமனம்!

Published by
பாலா கலியமூர்த்தி

தேசிய பசுமைத் தீர்ப்பாய உறுப்பினராக ஓய்வு பெற்ற நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா நியமனம்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வுபெற்ற புஷ்பா சத்தியநாராயணா தேசிய பசுமை தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினராக நியமனம் செய்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 4 ஆண்டுகளுக்கு பதவியில் இருப்பார் என மத்திய அரசு அறிவிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக கடந்த 2013-ல் பதவியேற்றார். திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் கடந்த 1960-ம் ஆண்டு பிறந்தார். சென்னை சட்டக் கல்லூரியில் கடந்த 1985-ல் சட்டப்படிப்பை முடித்து, வழக்கறிஞராக பதிவு செய்து கொண்டார்.

28 ஆண்டுகள் வழக்கறிஞராக சிவில் வழக்குகளில் ஆஜராகி வந்தார். சென்னை உயா்நீதிமன்றத்தில் மூத்த பெண் நீதிபதியாகப் பதவி வகித்து வரும் புஷ்பா சத்தியநாராயணா பிப்.27 ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

27 ஆண்டுகளுக்கு பிறகு இமாலய சாதனை படைத்த பாஜக! வெற்றி கொண்டாட்டத்தில் தொண்டர்கள்!

டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக  சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…

18 minutes ago

INDvENG : 2வது ஒருநாள் போட்டி எப்படி இருக்கும்? பிட்ச் நிலை, வானிலை நிலவரம், வீரர்கள் விவரம் இதோ..,

கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…

42 minutes ago

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : திமுக வெற்றி…கொண்டாட்டத்தில் தொண்டர்கள்!

ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…

60 minutes ago

நோட் பண்ணிக்கோங்க..’ரோஹித் சர்மா தான் தாக்கத்தை ஏற்படுத்துவார்”..கெவின் பீட்டர்சன் பேச்சு!

ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…

2 hours ago

“பயிற்சி செய்வது பயனளிக்காது”.. பழைய ஃபார்முக்கு வருவதற்கு ரோஹித்துக்கு யோசனை சொன்ன சஞ்சய் பங்கர்.!

ஒடிசா : இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி தங்களது சொந்த மண்ணில் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட…

3 hours ago

டெல்லியில் பாஜக வெற்றி! மக்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த பிப்ரவரி 5-ல் நடைபெற்ற  டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. காலை முதலே ஆளும்…

3 hours ago