எலி மருந்து, பால்டாயில் விற்பனைக்கு கட்டுப்பாடுகள்.. சாணம் பவுடருக்கு விரைவில் தடை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Published by
பாலா கலியமூர்த்தி

தனி நபர்களுக்கு எலி மருந்து, பால்டாயில் விற்பனை செய்ய தடை விதிக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மனநல சுகாதார நிறுவனத்தில், உலக தற்கொலை தடுப்பு தின நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 15,000 முதல் 16,000 பேர் தற்கொலையால் இறக்கின்றனர். இந்த எண்ணிக்கை விபத்துக்களில் இறப்பவர்களின் எண்ணிக்கையை விட அதிகம் என கூறினார்.

தூக்கு போட்டு தற்கொலை செய்துகொள்பவர்கள் 15 – 20% மட்டும் உள்ளார்கள். மற்றவர்கள் எலி மருந்து, பால்டாயில் மற்றும் சாணம் பவுடர் சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்கிறார்கள் என தெரிவித்தார். விஷப் பொருட்களின் கலவை கொண்ட சாணம் பவுடர் உற்பத்தி செய்யப்படுவதை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் அதற்கான தடை அறிவிப்பு விடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

எலி மருந்து, பால்டாயில் போன்றவைகளை கடைகளில் பாதுகாப்பாக லாக்கரில் வைத்து விற்க வேண்டும் என்றும் வெளிப்படையாக தெரியும் வகையில் விற்கக்கூடாது எனவும் கூறினார். அதேபோல் தற்கொலைக்கு காரணங்களாக இருக்கும் எலி மருந்து, பால்டாயில் உள்ளிட்டவற்றை தனி ஒருவருக்கு வழங்கக்கூடாது என்றும் ஓரிருவர் சேர்ந்து வந்தால் மட்டுமே வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.

தனி நபர்களுக்கு எலி மருந்து, பால்டாயில் விற்பனை செய்ய தடை விதிக்கப்படும் என்றும் எலி மருந்து, பால்டாயில் விற்பனைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் அரசாணைகளை துறை அலுவலர்கள் மூலம் விடுக்க இருப்பதாக தெரிவித்தார்.

மேலும், 104 ஹெல்ப்லைன் இதுவரை நீட் யுஜி எழுதிய சுமார் 10,000 மாணவர்களை அணுகி அவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கியுள்ளது. ஆலோசகர்கள் பெற்றோர்களிடம் பேசி, தங்கள் பிள்ளைகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தினர். பல மாணவர்கள் தங்கள் பெற்றோர்கள் மருத்துவ படிப்புகளை படிக்க வற்புறுத்துவதாக புகார் தெரிவித்தாக கூறினார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

மழையும் இருக்கு வெயிலும் இருக்கு! அலர்ட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்!

மழையும் இருக்கு வெயிலும் இருக்கு! அலர்ட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்!

சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் வெளுத்த நிலையில் அடிக்கடி சில இடங்களில் மழையும் பெய்தது. குறிப்பாக,…

34 minutes ago

அன்றே சூர்யாவை கணித்த ஜோதிடர்! ரெட்ரோ விழாவில் உண்மையை உடைத்துவிட்ட சிவகுமார்!

சென்னை : சூர்யா தற்போது நடித்துமுடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் வரும் மே 1-ஆம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில…

50 minutes ago

“தவெக ஐடி விங் ஒழுக்கமாக இருக்க வேண்டும்.,” தொண்டர்களுக்கு விஜய் ‘வீடியோ’ அட்வைஸ்!

சென்னை : இன்று தமிழக வெற்றிக் கழக கட்சி சார்பில், தவெக ஐடி விங் நிர்வாகிகளுக்கு பயிற்சி கூட்டம் நடைபெற்றது.…

1 hour ago

சூழ்நிலை புரியாதா? விராட் கோலி, படிதாரை சீண்டிய வீரேந்தர் சேவாக்!

பெங்களூர் : நேற்று சின்ன சாமி மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில்  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…

2 hours ago

தேர்தலுக்கு தயாராகுங்கள்.., தவெக கட்சியினருக்கு சிறப்பு பயிற்சி அளித்த ஆதவ் அர்ஜுனா!

சென்னை : தமிழ்நாட்டில் அடுத்தாண்டு (2026) இதே நேரத்தில் சட்டமன்ற தேர்தல் க்ளோபரங்கள் , பரபரப்புகள் என தமிழக அரசியல்…

2 hours ago

அது ஃபேக்…ரூ.2,000 மேல் பணம் அனுப்பினால் ஜிஎஸ்டி வரியா..? உண்மையை உடைத்த அரசு!

டெல்லி : இன்றயை காலத்தில் யுபிஐ (UPI - Unified Payments Interface) பரிவர்த்தனை என்பது அதிகரித்துள்ள நிலையில், தொடர்ச்சியாக இதனை…

3 hours ago