தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே இடஒதுக்கீடு – மதுரை கிளை அதிரடி உத்தரவு

Published by
murugan

1 முதல் 12-ஆம்  வகுப்புவரை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே 20% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று மதுரை கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த சக்திராஜ் என்பவர் சென்னை மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், டிஎன்பிஎஸ்சி கடந்த 2019-ஆம்  ஆண்டு ஜனவரி 1-ம் தேதி துணை ஆட்சியர் உள்ளிட்ட 181 பணியிடங்களுக்கான தேர்வுக்கு அழைப்பு விடுத்தது.

அதில், தொலைநிலை கல்வியில் தமிழில் பயின்றவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் முழுமையாக தமிழ்வழியில் படித்த எனக்கு வழங்கப்படவில்லை இடஒதுக்கீடு என கூறினார். எனவே 1 முதல் 12ம் வகுப்பு வரை ஆங்கில வழியில் படித்துவிட்டு இடஒதுக்கீடு பெற தொலைநிலை கல்வியில் பயின்று  இட ஒதுக்கீட்டை பெறுகிறார்கள்.

இந்த இடஒதுக்கீட்டை முழுமையாக தமிழ்வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே தர வேண்டும் என மனுதாரர் கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 1 முதல் 12-ஆம்  வகுப்புவரை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே 20% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. பள்ளி, கல்லூரி அல்லது தொழில்துறை படிப்பு ஆகிய எல்லாவற்றிற்கும் இந்த உத்தரவு பொருந்தும் என தெரிவித்தார்.

Published by
murugan

Recent Posts

எடப்பாடி பழனிச்சாமி கனவில் இருக்கிறாரா? கேள்வி எழுப்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

எடப்பாடி பழனிச்சாமி கனவில் இருக்கிறாரா? கேள்வி எழுப்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

நாமக்கல் : அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவானது இன்று நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதல்வர் மு.க.…

28 mins ago

ஐப்பசி மாதத்தில் துலாஸ்நானம் ஏன் செய்ய வேண்டும் தெரியுமா?

சென்னை -துலா ஸ்நானம்  என்றால் என்ன, அதன் பலன்கள் மற்றும் ஐப்பசி மாதத்தின் சிறப்புகளை பற்றி இந்த ஆன்மீக செய்தி…

1 hour ago

IND vs NZ : 2-வது டெஸ்ட் போட்டி..! காயம் மீண்டு களமிறங்கும் ரிஷப் பண்ட்?

புனே : இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரானது நடைபெற்று வருகிறது. இதில்,முன்னதாக நடைபெற்ற…

2 hours ago

கங்குவா பாடலில் அந்த மாதிரி காட்சி! வெட்டி தூக்கிய சென்சார் குழு?

சென்னை : சூர்யா நடித்துள்ள கங்குவா படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் நவம்பர் 14-ஆம் தேதி உலகம் முழுவதும்…

2 hours ago

நாமக்கலில் வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் ஸ்டாலின்..!

நாமக்கல் : மாவட்டத்தில் பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டித் தொடங்கி வைப்பதற்காகச் சென்னையிலிருந்து இன்று காலை விமானம்…

2 hours ago

டானா புயல் எப்போது கரையை கடக்கும்? இந்திய வானிலை மையம் அலர்ட்!!

ஒடிசா : வங்கக் கடலில் உருவான புதிய புயலுக்கு டானா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு…

3 hours ago