தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே இடஒதுக்கீடு – மதுரை கிளை அதிரடி உத்தரவு

Default Image

1 முதல் 12-ஆம்  வகுப்புவரை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே 20% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று மதுரை கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த சக்திராஜ் என்பவர் சென்னை மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், டிஎன்பிஎஸ்சி கடந்த 2019-ஆம்  ஆண்டு ஜனவரி 1-ம் தேதி துணை ஆட்சியர் உள்ளிட்ட 181 பணியிடங்களுக்கான தேர்வுக்கு அழைப்பு விடுத்தது.

அதில், தொலைநிலை கல்வியில் தமிழில் பயின்றவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் முழுமையாக தமிழ்வழியில் படித்த எனக்கு வழங்கப்படவில்லை இடஒதுக்கீடு என கூறினார். எனவே 1 முதல் 12ம் வகுப்பு வரை ஆங்கில வழியில் படித்துவிட்டு இடஒதுக்கீடு பெற தொலைநிலை கல்வியில் பயின்று  இட ஒதுக்கீட்டை பெறுகிறார்கள்.

இந்த இடஒதுக்கீட்டை முழுமையாக தமிழ்வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே தர வேண்டும் என மனுதாரர் கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 1 முதல் 12-ஆம்  வகுப்புவரை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே 20% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. பள்ளி, கல்லூரி அல்லது தொழில்துறை படிப்பு ஆகிய எல்லாவற்றிற்கும் இந்த உத்தரவு பொருந்தும் என தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்