பள்ளி நேரத்தை காலை 7.30 மணியிலிருந்து 12.30 மணி மாற்றியமைக்குமாறு முதலமைச்சருக்கு கோரிக்கை.
தமிழகத்தில் வெயிலின் தாக்கத்தால் பள்ளி குழந்தைகள் பாதிக்கப்படுவதை தடுக்க மே மாதம் தேர்வு முடியும் வரை பள்ளி நேரத்தை காலை 7.30 மணியிலிருந்து 12.30 மணி மாற்றியமைக்குமாறு முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மாநிலத் தலைவர் இளமாறன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மாநிலத் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த காலங்களை காட்டிலும் வெயிலின் தாக்கம் இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து அதிகமாக உள்ளது. நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலை கருத்தில் கொண்டு மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் இயங்கும் நேரம் சில மாநிலங்களில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் ஆந்திர மாநிலத்தில் காலை 8 மணி முதல் 11 மணி வரை பள்ளி நேரமாக உள்ளது. அதேபோல கர்நாடகாவில் தேர்வு வைத்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தற்போது வெயில் 100 டிகிரியை தாண்டியுள்ளது. வரும் நாட்களில் வெயில் உச்சத்தைத் தொடும் என அஞ்சப்படுகிறது.
சுட்டெரிக்கும் வெளியிலின் தாக்கத்தால் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு சரும நோய்கள் குழந்தைகளுக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடலும் உள்ளமும் சரியாக இருந்தால் மட்டுமே கற்றலும் கற்பித்தலும் சிறப்பாக இருக்கும். எனவே இதனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் பள்ளி நேரத்தை மாற்றியமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்த நிலையில், …
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்து இருந்தார். அவர்…
ஹரியானா : மாநிலம் குருகிராமில் கடந்த ஏப்ரல் 5, 2025 அன்று, 46 வயது விமானப் பணிப்பெண்ணாகப் பயிற்சி பெற்ற ஒரு…
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : சென்னை வானிலை ஆய்வு மையம் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், வெப்ப நிலை உயரும் எனவும் எச்சரிக்கை கொடுத்து தகவலை…