கொரோனாவால் இறந்த மருத்துவர்களுக்கு நாளை இரவு 9 மணிக்கு மருத்துவர்கள், பணியாளர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்த வேண்டும்.
அரசு மருத்துவர்கள் நாளை முதல் கருப்பு பட்டை அணிந்து பணிபுரிய வேண்டும் என்று அரசு மருத்துவர் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. கொரோனாவுக்கு உயிரிழக்கும் மருத்துவர்களின் இறுதிச்சடங்கை அரசு மரியாதையுடன் நடத்தக்கோரி போராட்டம் என்று மருத்துவ கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் நாளை இரவு 9 மணிக்கு மருத்துவர்கள், பணியாளர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. பணியின்போது இறந்த மருத்துவர்களுக்கு குடும்பத்துடன் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்த வேண்டும் என்று மருத்துவர் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதனிடையே, மருத்துவர்களின் அர்ப்பணிப்பிற்கு மரியாதையளித்து மனிதநேயத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்திருந்தார். நம்மை பாதுகாக்க போராடிய மருத்துவர்களை இழந்திருக்கும் இந்த வேதனையான நேரத்தில் அவர்களின் உடலை நல்லடக்கம் செய்வதில் எதிர்ப்பு தெரிவிப்பது மனவருத்தமளிக்கிறது என்றும் மருத்துவர்களும் மற்றும் பிற களப்பணியாளர்களும் அச்சப்பட தேவையில்லை. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல் அடக்கத்திற்கு எதிர்ப்பு எழுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிருந்தார். மேலும் கொரோனாவால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதற்கு எதிர்த்தால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என கமிஷனர் எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…
டெல்லி : பாகிஸ்தானுடனான எல்லையில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது, ஆனால் இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது. இந்த நிலையில், ராணுவ நடவடிக்கைகளுக்கான…
சென்னை : சமீபகாலமாக நடிகர் விஷாலுக்கு உடல் நலம் சரியில்லாமல் இருப்பது ஒரு சோகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், கடந்த ஜனவரி…
மதுரை : உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, அழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம், இன்று சிறப்பாக…
மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…
செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…