மருத்துவர்கள் கருப்புப் பட்டையுடன் பணிபுரிய வேண்டுகோள்.!

Published by
பாலா கலியமூர்த்தி

கொரோனாவால் இறந்த மருத்துவர்களுக்கு நாளை இரவு 9 மணிக்கு மருத்துவர்கள், பணியாளர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்த வேண்டும்.

அரசு மருத்துவர்கள் நாளை முதல் கருப்பு பட்டை அணிந்து பணிபுரிய வேண்டும் என்று அரசு மருத்துவர் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. கொரோனாவுக்கு உயிரிழக்கும் மருத்துவர்களின் இறுதிச்சடங்கை அரசு மரியாதையுடன் நடத்தக்கோரி போராட்டம் என்று மருத்துவ கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் நாளை இரவு 9 மணிக்கு மருத்துவர்கள், பணியாளர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. பணியின்போது இறந்த மருத்துவர்களுக்கு குடும்பத்துடன் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்த வேண்டும் என்று மருத்துவர் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதனிடையே, மருத்துவர்களின் அர்ப்பணிப்பிற்கு மரியாதையளித்து மனிதநேயத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்திருந்தார். நம்மை பாதுகாக்க போராடிய மருத்துவர்களை இழந்திருக்கும் இந்த வேதனையான நேரத்தில் அவர்களின் உடலை நல்லடக்கம் செய்வதில் எதிர்ப்பு தெரிவிப்பது மனவருத்தமளிக்கிறது என்றும் மருத்துவர்களும் மற்றும் பிற களப்பணியாளர்களும் அச்சப்பட தேவையில்லை. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல் அடக்கத்திற்கு எதிர்ப்பு எழுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிருந்தார். மேலும் கொரோனாவால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதற்கு எதிர்த்தால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என கமிஷனர் எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

சிறுமி மீது தவறு? சர்ச்சை பேச்சு எதிரொலி.! மயிலாடுதுறை ஆட்சியர் அதிரடி மாற்றம்!

சிறுமி மீது தவறு? சர்ச்சை பேச்சு எதிரொலி.! மயிலாடுதுறை ஆட்சியர் அதிரடி மாற்றம்!

மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…

1 hour ago

தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…

சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…

3 hours ago

AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!

லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…

4 hours ago

“கைதுக்கு நான் பயப்படவில்லை. இப்போதே விசாரணைக்கு தயார்” சீமான் பரபரப்பு பேட்டி!

சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…

4 hours ago

“விருப்பமில்லாமல் செய்தால் தான் அது பாலியல் வன்கொடுமை” சீமான் மீண்டும் சர்ச்சை பேச்சு!

தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…

7 hours ago

AFG vs AUS : அரையிறுதிக்கு செல்லப்போவது யார்? டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு.!

லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி 2025-இன் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன. இந்தப் போட்டி…

8 hours ago