ரூபாய் 26.85 கோடி மதிப்பீட்டில் ஏரியின் முகத்துவாரத்தை தூர்வாரி சீரமைத்தல்.
பழவேற்காடு ஏரியின் முகத்துவாரத்தை தூர்வாரி சீரமைத்து நேர்கல் சுவர்களுடன் நிரந்தரமாக நிலைப்படுத்தியுள்ளோம் என அதிமுக மீன்வளதுறை அமைச்சர் ஜெயக்குமார் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பழவேற்காடு ஏரியில் ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் மணல்திட்டுக்கள் ஏற்பட்டு முகத்துவாரம் அடைப்பட்டுவிடுகிறது எனவும் இதனால் இப்பகுதி மீனவர்கள் வங்கக் கடலில் சென்று தொழில் செய்ய இயலாத நிலை ஏற்படுகிறது.
இதனால், இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாக ஏரியின் முகத்துவாரத்தினை தூர்வாரி, நேர்கல் சுவர்கள் மூலம் நிலைப்படுத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மீனவர்கள் கோரி வருகிறார்கள்.
இந்நிலையில், அவர்களது கோரிக்கையின் அடிப்படையில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் 2020-21 ஆம் நிதியாண்டில் விதி எண் 110-ன் கீழ் திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு கிராமத்தில் ரூ.26.85 கோடி மதிப்பீட்டில் பழவேற்காடு ஏரியை தூர்வாரி ஆழப்படுத்தி நேர்கல் சுவர்கள் அமைத்து நிரந்தரமாக நிலைப்படுத்தப்படும் என அறிவிப்பு செய்தார்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …