“இந்தியா” எனும் பெயரை “இந்துஸ்தான்” அல்லது “பாரத்” என மாற்ற நினைத்தால் எதிர்மறை விளைவுகளை சந்திக்க நேரிடும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில், இந்தியா பெயரை மாற்ற நினைத்தால் எதிர்மறை விளைவுகளை சந்திக்க நேரிடும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா எனும் பெயரை “இந்துஸ்தான்” அல்லது “பாரத்” என மாற்றக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு, ஜூன் 3, அன்று உச்சநீதிமன்றதில் விசாரணைக்கு வந்தபொது, இந்த மனுவை கோரிக்கை மனுவாகக் கருதி, மத்திய அரசு முடிவு எடுக்கும் என நீதிபதிகள் தெரிவித்ததை சுட்டிக்காட்டினார்.
மேலும், இந்திய அரசியல் நிர்ணய சபையில் ஹிந்துஸ்தான் என்ற பெயரை சூட்ட வேண்டும் என்ற கோரிக்கைக்கு பல தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புகள் எழுந்தது. இது மறைக்க முடியாத வரலாறு எனவும், நாட்டின் பெயரையே மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வரும் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தை துணைக்கு அழைப்பதாகவும் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தியாவின் பெயரை மாற்ற வேண்டுமானால், இந்திய ஐக்கிய நாடுகள் என்று மாற்றுவதுதான் பொருத்தமாகவும் கூட்டாட்சி கோட்பாட்டிற்கு வலு சேர்ப்பதாகவும் அமையும் என்று கூறிய வைகோ, தங்கள் விருப்பம் போல நாட்டின் பெயரை மாற்ற நினைத்தால் எதிர்மறை விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார்.
மும்பை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி…
மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…
மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…
மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…
சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…