குமுளி மற்றும் கூடலூர் போலீசார் உதவியுடன் தமிழக குமுளி பேருந்து நிலையத்தில் இயங்கும் 35 கடைகளை ஜேசிபி எந்திரம் மூலம் இடித்து அப்புறப்படுத்தினர்.
தமிழக-கேரள எல்லை இணைக்கும் தேனி-கொல்லம் தேசிய நெடுஞ்சாலை கேரளாவிற்கு செல்கிறது. கடந்த 30 ஆண்டுகளாக, இந்த தேசிய நெடுஞ்சாலை அருகே கம்பம் மேற்கு வனசரக எல்லையை ஒட்டிய பகுதி மற்றும் தேசிய நெடுஞ் சாலையை ஆக்கிரமித்து 35 கடைகள் இயங்கி வந்தது. இந்நிலையில், கடந்த மார்ச் மாதத்தில், பொது ஊரடங்கால் முடங்கிய போக்குவரத்தை பயன்படுத்தி, தேனி மாவட்டம் லோயர் கேம்பில் இருந்து, தமிழக குமரி வரையிலான ஆறு கிலோமீட்டர் பாதை அகலப்படுத்தும் பணியை தேசிய நெடுஞ்சாலை துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இதனையடுத்து, தேனி-கொல்லம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணியின் ஒரு பகுதியாக இந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற முடிவு செய்யப்பட்டது. இந்த கடைகளை அகற்ற 15 நாட்களுக்கு முன்னமே, தேசிய நெடுஞ்சாலை துறையினரால் நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனாலும் அகற்றப்படாததால் தேசிய நெடுஞ்சாலை துறையினர் தேனி மாவட்டம் லோயர் கேம்பில் இயங்கும் குமுளி மற்றும் கூடலூர் போலீசார் உதவியுடன் தமிழக குமுளி பேருந்து நிலையத்தில் இயங்கும் 35 கடைகளை ஜேசிபி எந்திரம் மூலம் இடித்து அப்புறப்படுத்தினர்.
இதற்கு முன்னதாக கடைகளை இடிப்பதற்கு கடைக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்து, ஜேசிபி இயந்திரத்தின் முன் படுத்து இடிக்க விடாமல் தடுத்தனர். இதனை தொடர்ந்து, அவர்களை அப்புறப்படுத்திய பின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, கடைகள் இருந்த இடத்தில் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு, இரு மாநில எல்லை இணைப்பு பகுதியில், போக்குவரத்து நெரிசலை குறைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை துறையினர் தெரிவித்துள்ளனர்.
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…