கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன…!!!
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு நிவாரண பொருட்கள் ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டியில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதிகளுக்கு வியாபாரிகள் சங்க கட்டத்தில் நிவாரண பொருட்கள் சேமிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது. அனுப்பப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் ஆகும்.
இந்த பொருட்கள் பார்சல் செய்யப்பட்டு கலெக்டர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது. இதனை ஒய்வு பெற்ற போலீஸ் ஐ.ஜி.மாசானமுத்து நிவாரண பொருட்கள் ஏற்றிய லாரியை கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்.