கடந்த டிசம்பர் மாதம் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மிக்ஜம் புயல் காரணமாக கனமழை பெய்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து, டிசம்பர் மாதம் 17 மற்றும் 18-ம் தேதி தூத்துக்குடி, நெல்லை,தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்பட்டது.
உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி.? முதலமைச்சர் விளக்கம்.!
இந்நிலையில், மிக்ஜம் புயல் மற்றும் தென்மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கான நிவாரண தொகையாக 19,692.67 கோடியும், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கான நிவாரண தொகையாக 18,214.52 கோடி என மொத்தம் ரூ 37,907 கோடி தமிழ்நாடு அரசு சார்பில் கோரியுள்ளது.
ஆனால் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து இன்னும் நிதி ஒதுக்கப்படாததால் வெள்ள நிவாரண தொகையை உடனடியாக வழங்கக்கோரி இன்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழக எம்.பி.க்கள் குழு சந்தித்தனர். அதன்படி, திமுகவின் மக்களவை குழு தலைவர் டி.ஆர் பாலு தலைமையில் ஜெயக்குமார், வைகோ, சிபிஐ சுப்பராயன், சிபிஎம் நடராஜன், விசிக ரவிக்குமார், முஸ்லிம் லீக் நவாஸ்கனி, கொமதேக சின்ராஜ் ஆகிய 8 எம்.பிக்கள் சந்திப்பில் இடம் பெற்றனர்.
TNPSC: குளறுபடிகளை தடுக்க விசாரணைக்குழு அமைக்க உத்தரவு.!
டெல்லியில் உள்துறை அமித்ஷாவை சந்தித்த பின் திமுக எம்.பி டி.ஆர் பாலு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது” மிக்ஜம் புயல் , தென் மாவட்ட பாதிப்புக்கு தமிழக அரசு கோரிய ரூ.37,000 கோடியை உடனடியாக விடுவிக்க கோரிக்கை வைத்துள்ளோம். வெள்ளம் சேதம் குறித்து எடுத்துரைத்தோம் என கூறினார்.
மேலும், ஜனவரி 15-ஆம் தேதி அன்று டெல்லி திரும்பும் மத்திய அரசின் குழு தரும் அறிக்கை அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் எனவும் மத்திய அரசு தமிழ்நாட்டைப் புறக்கணிக்கவில்லை, மிகப்பெரிய சேதம் ஏற்பட்டுள்ளது என்பதை உணர்ந்துள்ளோம். நிதி வழங்குவது குறித்து 27-ஆம் தேதிக்குள் அறிவிப்பு வெளியாகும் என அமித்ஷா கூறியதாக டி.ஆர் பாலு தெரிவித்தார்.
சென்னை : நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் தனியார்…
சென்னை : என்னதான் ஆச்சு சென்னை அணிக்கு என்கிற வகையில் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி…
சென்னை : நேற்று மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, சட்டப்பேரவை கூடிய நிலையில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை தொடர்பான பட்ஜெட்…
சென்னை : கைலாசாவில் வசித்து வருவதாக சொல்லப்படும் நித்தியானந்தா கடந்த 2 நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக அவருடைய சகோதரியின் மகன்…
சென்னை : தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நேரம் கேட்டு…
சென்னை : இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி இருவரும் விவாகரத்து பெறுவதாக கடந்த ஆண்டே அறிவித்துவிட்டனர். அதனைத்தொடர்ந்து இவர்களுடைய…