ஆக 10-ஆம் தேதி உடற்பயிற்சி கூடங்கள் செயல்படுவதற்கான நெறிமுறைகள் வெளியீடு.!

Default Image

உடற்பயிற்சி கூடங்கள் செயல்படுவதற்கான நெறிமுறைகள் வெளியீடு.

தமிழகத்தில் ஆகஸ்ட் 10-ஆம் தேதி முதல் உடற்பயிற்சிக் கூடங்களை திறக்க  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அனுமதி அளித்துள்ளார். தற்போது அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் கட்டுப்பாட்டு பகுதிகளில் இருக்கக் கூடிய உடற்பயிற்சி கூடங்கள் தொடர்ந்து மூடியே இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில்,தமிழ்நாடு உடற்பயிற்சியக உரிமையாளர்கள் மற்றும் பயிற்சியாளர்கள்  நல சங்கத்தின் (Tamil Nadu Gym Owners & Trainerswelfare Association) சார்பில் அதன் நிர்வாகிகள், தமிழ்நாட்டில் உள்ளஉடற்பயிற்சியகங்களை திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

அக்கோரிக்கையினை பரிசீலித்த முதலமைச்சர் மத்திய அரசு தனியார் உடற்பயிற்சிக் கூடங்களை  திறக்க ஆகஸ்ட் 5 தேதி முதல் அனுமதி அளித்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் தனியார் உடற்பயிற்சி கூடங்கள் (stand alone only), 50 வயது மற்றும் அதற்குக் குறைவான வயதுடைய வாடிக்கையாளர்களுடன் 10.8.2020 முதல் இயங்க அனுமதிக்கப்படுகிறது.

ஒருவர் உடற்பயிற்சி செய்யும் உபகரணங்களை மற்றவர் பயன்படுத்துவதற்கு முன்பு கிருமிநாசினி கொண்டு கட்டாயம் சுத்தப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு உடற்பயிற்சி நிலையங்களில் ஏசி பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும், ஆனால் அதன் வெப்பநிலை 24 டிகிரியிலிருந்து 30 டிகிரிக்குள் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்