பேரறிவாளன் வழக்கில் அளித்த தீர்ப்புக்கும், ஜிஎஸ்டி வழக்கில் அளித்த தீர்ப்புக்கும் தொடர்பு – அமைச்சர்

Published by
பாலா கலியமூர்த்தி

வரி விதிக்கும் மாநில அரசின் அதிகாரத்தை மீறி ஜிஎஸ்டி கவுன்சில் முடிவெடுக்க அதிகாரம் இல்லை என அமைச்சர் தகவல்.

ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைகள் மத்திய, மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது என உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியிருந்தது. ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைகள் மற்றும் அறிவுரைகள்தான் வழங்க வேண்டுமே தவிர இதை கட்டாயம் செய்யுங்கள் என்று எந்தவொரு அரசுகளுக்கும் உத்தரவிடமுடியாது என்றும் ஜிஎஸ்டி தொடர்பான விவகாரத்தில் சட்டங்களை இயற்ற மத்திய, மாநில அரசுகளுக்கு சட்டப்பிரிவு 246 ஏ-வின்படி சம உரிமை உண்டு எனவும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், மதுரையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மாநில நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ஜிஎஸ்டி தொடர்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்பு தெளிவாக உள்ளது. மாநில, மத்திய அரசுகளின் உரிமைகளை கடந்து முடிவெடுக்க ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு அதிகாரம் கிடையாது. மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அமைந்துள்ளது. பேரறிவாளன் விடுதலையும், ஜிஎஸ்டி வரைமுறை தீர்ப்பையும் இணைத்து பார்க்க வேண்டிய கட்டாயம் உள்ளது. பேரறிவாளன் வழக்கில் அளித்த தீர்ப்புக்கும், ஜிஎஸ்டி வழக்கில் அளித்த தீர்ப்புக்கும் தொடர்பு உள்ளது என தெரிவித்தார்.

தமிழக அமைச்சரவையோ, சட்டமன்றமோ இயற்றும் தீர்மானத்தை நிறுத்தி வைக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. மாநிலங்களின் உரிமைகளை குறைக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட முடியாது. தனது செயல்பாட்டின் மூலம் நாட்டின் திசையையே திருப்பி இருக்கிறது முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு. கூட்டாட்சி தத்துவத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது முக ஸ்டாலின் அரசு. மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள தேர்தல் பத்திரங்கள் எந்த அடிப்படையில் கொண்டுவரப்பட்டது என்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை எந்த சட்டத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது என்பது குறித்தும் எனவும் விளக்கமளித்தார்.

ஜிஎஸ்டி கவுன்சிலில் எடுக்கும் பரிந்துரையை மாநில சட்டமாக்கினால் தான் அமலுக்கு வரும். ஜிஎஸ்டி பரிந்துரையை மாநிலங்ககள் ஏற்கவில்லை என்றால் செயல்படுத்துமாறு கட்டாயப்படுத்த முடியாது. விருப்பப்பட்டால் மட்டுமே மாநிலங்கள் ஜிஎஸ்டி கவுன்சில் முடிவுகளை ஏற்கலாம் என உச்ச நீதிமன்றம் தெளிவாக கூறியுள்ளது என்றும் குறிப்பிட்டார். தற்போது வந்துள்ள தீர்ப்பு மாநில உரிமைக்கும், கூட்டாட்சி தத்துவத்துக்கு மற்றும் முதலமைச்சரின் முயற்சிக்கும் கிடைத்த வெற்றி ஆகும் என்றும் கூறினார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனாவுக்கு கெட்ட நேரமா?. ரோகிணி போடும் அடுத்த குண்டு..!

சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனாவுக்கு கெட்ட நேரமா?. ரோகிணி போடும் அடுத்த குண்டு..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து  மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…

13 mins ago

“திருப்பதியில் ‘மகா பாவம்’ செய்துவிட்டனர்” குமுறும் முன்னாள் தலைமை அர்ச்சகர்.!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…

16 mins ago

ENGvsAUS : ‘டிராவிஸ் ஹெட்’ ருத்ரதாண்டவம்! 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி!

நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…

48 mins ago

போரில் வெற்றி பெற்றாரா ஹிப்ஹாப் ஆதி? “கடைசி உலகப் போர்” டிவிட்டர் விமர்சனம் இதோ!

சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…

1 hour ago

துணை முதல்வர் கேள்வி., “அரசியல் வேண்டாம்” ஒதுங்கிய ரஜினிகாந்த்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…

1 hour ago

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

3 hours ago