வேலூர் தொகுதி நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் வேட்புமனு பரிசீலனை இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் நடைபெற்றது. அப்போது, திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனுக்களை நிராகரிக்க மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டார். அதிமுக வேட்பாளர் சண்முகம் கலந்து கொள்ளவில்லை. திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் , பொருளாளர் துரைமுருகன் உட்பட அனைத்து வேட்பாளர்களும் கலந்து கொண்டனர்.
அதிமுக வேட்பாளர் A .C சண்முகம் வேட்புமனு பரிசீலனையின் போது அங்கு இருந்த பலர், புதிய நீதிக்கட்சியின் தலைவராக இருக்கும் சண்முகம் அதிமுக வேட்பாளராக போட்டியிடுவதை ஏற்க முடியாதது என்று கூறினர்.இத அடுத்து அவரது மனு ஏற்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.
அதே போல் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வேட்பு மனு மீதான பரிசீலனையின் போது பணப்பட்டுவாடா புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் வேட்பளர் போட்டியிட முடியாது என்றனர், இதனால் கதிர் ஆனந்த் வேட்பு மனுவும் நிறுத்தி வைக்கப்பட்டது.
சுமார் இரண்டு மணி நேரத்திற்கு பின், பிற்பகல் 1.30 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த A .C சண்முகம் தான் அதிமுக உறுப்பினர் என்று கூறி உறுப்பினர் அட்டையை காண்பித்தார். பின்னர் அவரது வேட்பு மனு ஏற்கப்பட்டது. திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் அவர்களின் வழக்கு சம்பத்தப்பட்ட ஆவணங்களை வழக்கறிஞர் மாவட்ட ஆட்சியரிடம் காண்பித்தார். அதனால் அவரது வேட்புமனுவும் ஏற்கப்பட்டது.
சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…
பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது அடுத்ததாக வரும் அக்-20 ம்…
ஜெருசலேம் : காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக போர்…
சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…
துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…