ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிரான தேர்தல் வழக்கு நிராகரிப்பு..!

ஓ.பன்னீர்செல்வம் மீது வழக்கு:
தமிழகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது போடி நாயக்கனூர் தொகுதியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிட்டு வெற்றிப்பெற்றார். இந்த தேர்தலுக்கான வேட்புமனுவில் ஓ.பன்னீர்செல்வம் சொத்துக்கள் கடன் விவரங்களை மறைத்ததால் வேட்பு மனு ஏற்கப்பட்டது. இதனால், ஓ.பன்னீர்செல்வம் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரி வாக்காளர் மிலானி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
வழக்கு நிராகரிப்பு:
மிலானி தாக்கல் செய்த மனுவை நிராகரிக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி பாரதிதாசன் வாக்காளர் நிலானி தொடர்ந்த மனுவை நிராகரித்துள்ளார்.