கொரோனா பாதிப்பை குறைக்க கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் – மருத்துவக்குழு

Default Image

கொரோனா பாதிப்பை குறைக்க கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என்று  மருத்துவக்குழு பரிந்துரை செய்துள்ளது. 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,தலைமை செயலகத்தி மருத்துவ குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி மீண்டும் நாளை ஆலோசனை நடத்தினார்.இதன் பின்னர் மருத்துவ குழுவின் குகானந்தம் கூறுகையில்,தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தற்போது உச்சத்தை எட்டியுள்ளது. உச்சத்தை எட்டியுள்ளதால் கொரோனா பாதிப்பு இனி குறையத் தொடங்கும்.சென்னையில் கட்டுப்பாடுகளை கடுமையாக்க மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளதாக தெரிவித்தார்.தமிழகம் முழுவதும் 75,000 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளது.தலைவலி காய்ச்சல் ஏற்பட்டால் அலட்சியப்படுத்த வேண்டாம்.பரிசோதனைகளை அதிகரிப்பது; மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்துவது போன்ற எங்களின் பரிந்துரைகளை ஏற்று அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது என்றும் தெரிவித்தார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்