நளினி மனுவை விசாரணைக்கு பட்டியலிட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், முன்கூட்டியே விடுதலை செய்ய கோரி மற்றொரு தண்டனை கைதியான நளினி சென்னை உயர் நீதிமாமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு விசாரணையின்போது, நளினிக்கு எந்த சட்டத்தின் அடிப்படையில் ஜாமீன் வழங்க முடியும்? என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
உயர்நீதிமன்றத்தால் ஜாமீன் வழங்க முடியாது, ஜாமீன் கோரி நளினி உச்சநீதிமன்றத்தை தான் அணுக முடியும் என்றும் தெரிவித்திருந்தது. முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரும் நளினியின் வழக்கை மார்ச் 24க்கு இன்று ஒத்திவைத்திருந்தது.
இந்த நிலையில், இன்று விசாரணையின்போது, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்ய கோரும் நளினி மனுவை விசாரணைக்கு பட்டியலிட பதிவுத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருக்காமல் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய உத்தரவிடக் கோரிக்கை வைத்துள்ளார். 42 மாதங்களாக எந்த முடிவும் எடுக்காததால் தனிப்பட்ட சுதந்திரம் பாதிக்கப்ட்டுள்ளது என்று நளினி மனுவில் தெரிவித்துள்ளார்.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…