மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய மறுப்பு.! 20 பேர் மீது வழக்குப்பதிவு.!

Default Image

கொரோனாவால் உயிரிழந்த சென்னை மருத்துவரின் உடலை அடக்கம் செய்யவிடாமல் தடுத்ததற்காக கீழ்பாக்கம் பகுதி மக்கள் 20 பேரின் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து காவல்துறை  கைது செய்துள்ளனர்.

சென்னையில் கொரோனா பாதிப்பால் 55 வயது மருத்துவர் ஒருவர் உயிரிழந்தார். இவரின் உடலை கீழ்பாக்கம் மயானத்தில் அடக்கம் செய்ய ஊழியர்கள் சென்றனர்.

ஆனால், கீழ்பாக்கம் பகுதி மக்கள் மருத்துவரின் உடலை கீழ்பாக்கம் மயானத்தில் அடக்கம் செய்ய மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. பின்னர் மருத்துவரின் உடல் வேறு இடத்திற்கு கொண்டு சென்று அடக்கம் செய்யப்பட்டது.

இது குறித்து, மருத்துவரின் உடலை அடக்கம் செய்யவிடாமல் தடுத்ததாக கீழ்பாக்கம் பகுதி மக்கள் 20 பேரின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். அவர்கள் மீது, ஊழியர்களை வேலை செய்யவிடாமல் தடுத்தது, கொலைமிரட்டல், ஊரடங்கு மீறல், சிறைபிடித்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்