ஜன.16 அன்று பயணம் முன்பதிவு செய்தவர்களுக்கு கட்டணம் திரும்பி தரப்படும் – போக்குவரத்து துறை

Default Image

ஜனவரி-16 அன்று பயணம் செய்ய முன்பதிவு செய்தவர்களுக்கு இரண்டு நாட்களில் அவர்கள் செலுத்திய கட்டணம் திருப்பி தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் புதிய கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் சென்னையில் இருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும்,  பொங்கல் சிறப்பு பேருந்துகளில்  75 சதவீத பயணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஜனவரி 16-ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. எனவே வருகிற ஜனவரி 16ஆம் தேதி பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படாது என்று போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜனவரி 16 அன்று பயணம் செய்ய முன்பதிவு செய்தவர்களுக்கு இரண்டு நாட்களில் அவர்கள் செலுத்திய கட்டணம் திருப்பி தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live tn
Sanju Samson
DMK MP A Rasa Speak about Waqf Act 2025
CM MK Stalin writes to PM Modi
Union minister Kiran Rijiju
Yashasvi Jaiswal
Encounter tn