ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொடுக்கபடும் மண்ணெண்ணெய் அளவு குறைப்பு.
தமிழகத்தில் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும், அரசு இலவச அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய், பருப்பு, பாமாயில் என பல பொருட்களை மலிவு விலையில் நியாய விலை கடையில் கொடுத்து வருகிறது. இதற்கு மத்திய அரசு மானியம் வழங்கி வரும் நிலையில், தற்போது குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணையின் அளவு குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி ரேஷன் கார்டு ஒன்றுக்கு, இரண்டு லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கி வந்த நிலையில், தற்போது மத்திய அரசு அதனை குறைத்து உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுவரை தமிழகத்திற்கு மத்திய அரசு அளித்து வந்த மண்ணெண்ணையை அளவு தற்போது 20 சதவீதமாக மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் நுகர்வோருக்கு வழங்கப்பட வேண்டிய மண்ணெண்ணெய் அளவை குறைக்க வேண்டிய நிலை தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…