செம்மரம் கடத்தல் – தமிழகத்தை சேர்ந்த 22 பேர் கைது!

Published by
பாலா கலியமூர்த்தி

ஆந்திரா மாநிலத்தில் செம்மரம் கடத்த முயன்ற தமிழகத்தை சேர்ந்த 22 பேர் உட்பட மொத்தம் 25 பேரை அம்மாநில தடுப்பு பிரிவு காவல்துறை கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலத்தில் செம்மரங்கள் அதிகம் இருப்பதால், இதனை வெட்டி பல காலங்களாக கடத்தல் சம்பவம் நடந்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் ஆந்திர மாநில அரசு, செம்மரம் கடத்தல் தடுப்பு பிரிவு ஒன்றை உருவாக்கி  செம்மரம் கடத்தலை தடுத்து வருகின்றனர்.

இந்த சமயத்தில் ஆந்திராவில் செம்பரம் கட்டை கடத்துவதாக தடுப்பு பிரிவு காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சாலை வழியாக செல்லும் லாரிகளை சோதனை நடத்தி வந்தனர். இந்த சோதனையின்போது சுமார் 20 பேர் கொண்ட குழு ஒரு லாரியில் சுமார் 11 செம்மரம் கட்டைகள் கடத்தியாக கைது செய்யப்பட்டு, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுபோன்று மற்றொரு இடத்தில் செம்மரம் வெட்டி கடத்துவது தெரிவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அப்பகுதிக்கு சென்று செம்மரம் கடத்த முயன்றவர்களை கைது செய்தனர். இந்த நிலையில், ஆந்திராவில் செம்மரம் கடத்த முயன்ற தமிழகத்தை சேர்ந்த 22 பேர் உட்பட மொத்தம் 25 பேர் கைது செய்யப்பட்டனர்.

ரூ.60 லட்சம் மதிப்பிலான 21 செம்மரம் கட்டைகளை பறிமுதல் செய்து, ஆந்திர காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும், கடத்தலுக்கு பயன்படுத்திய ஒரு லாரி, 2 இருசக்கர வாகனம், செல்போன்கள் மற்றும் மரம் அறுக்க பயன்படுத்தப்படும் ரம்பம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

4 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

4 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

4 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

4 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

5 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

5 hours ago