ரெட் அலர்ட் எச்சரிக்கை எதிரொலி ..!25 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மதுரை வந்தனர்…!

Default Image

ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில் 25 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மதுரை வந்தனர்.
தமிழகத்தில் மூன்று நாட்களாக பரவலாக மலை பெய்து வருகிறது. இதனையடுத்து அரபிக்கடலில் தென்கிழக்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதை தொடர்ந்து பல மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்புப்படையினர் தாயார் நிலையில்  உள்ளனர்.
அதனால் அக்டோபர் 7 ஆம் தேதி ரெட் அலர்ட்டை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக கன்னியாகுமரி ,நீலகிரி,மதுரை,கோவை மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்ப்புப்படையினர் சென்றனர்.
இந்நிலையில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில் 25 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மதுரை வந்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்