தப்பியது தமிழகம் …!ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ் ..!வானிலை ஆய்வு மையம்  அறிவிப்பு ..!

Default Image

ரெட் அலர்ட் எச்சரிக்கை திரும்பப் பெறப்படுகிறது என்று வானிலை ஆய்வு மையம்  அறிவித்துள்ளது.

மழை  தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கையில், அக்டோபர் 7ஆம் தேதி தமிழகத்தில் வானிலை மிகவும்மோசமாக இருக்கும் .எனவே “ரெட் அலெர்ட்”  எச்சரிக்கை விடுகப்பட்டது.அதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடையவேண்டும் பெரும்பாலான பகுதிகளில் மின் இணைப்புதுண்டிக்கப்படும்.தமிழகத்தில் 25 சென்டிமீட்டருக்கு மேல் மழை பெய்யும் .கடல் அதிக சீற்றத்துடன் காணப்படும், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்என்றும் எச்சரிக்கை விடுத்தது  இந்திய வானிலை ஆய்வு மையம்.ரெட் அலர்ட்டை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக கன்னியாகுமரி ,நீலகிரி,மதுரை,கோவை மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்ப்புப்படையினர் சென்றனர்.

Image result for மழை
இந்நிலையில் தற்போது தமிழகத்தில் நாளை அதிகனமழைக்கு வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் , மேற்கு தொடர்ச்சிமலையை ஒட்டியுள்ள பகுதிகளில் நாளை அதி கனமழை எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்படுகிறது.நேற்று உருவான புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, வலுவான குறைவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக அதே இடத்தில் இருக்கிறது.குமரிக்கடல், லட்சத்தீவு பகுதிகளுக்கு இன்று முதல் 8ம் தேதி வரை மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம்.ஆனால் ரெட் அலர்ட் எச்சரிக்கை திரும்பப் பெறப்படுகிறது என்றும் அறிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்