நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்.
இயற்கை வளங்களை ஒருங்கே பெற்ற மாவட்டமான நீலகிரியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், அந்த மாவட்டமே சீர்குலைந்த நிலையில் காணப்படுகிறது. இயற்கையின் அழிவில் இருந்து யாரும் தப்ப முடியாது என்பதற்கு நீலகிரி ஒரு எடுத்துக்காட்டாக மாறியுள்ளது.
நீலகிரியில் கொட்டித்தீர்த்த கனமழையால், பல இடங்கள் மிகவும் சேதமடைந்துள்ள நிலையில், கனமழையுடன் சூறாவளி காற்றும் வீசி வருவதால், சாலைகளில் அங்கங்கு மரங்கள் முறிந்து விழுந்து மின்கம்பிகளின் மேல் விழுந்ததால், மின்விநியோகமும் துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை ,பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும், தீயணைப்பு துறை வீரர்களும் துரிதமாக செயல்பட்டு மரங்களை அகற்றி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வருவதால், 200-க்கும் மேற்பட்ட இடங்கள் அபாயகரமான பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளது.
அப்பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பாக தங்க வைக்க 567 முகாம்களை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. மேலும் முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்படாமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், அம்மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…
லக்னோ : தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…
கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…
சென்னை : ஐபிஎல் திருவிழா ஆரம்பித்துவிட்டது. அதில் வழக்கம் போல புதிய இளம் வீரர்கள் நட்சத்திரங்களாக ஜொலிக்க ஆரம்பித்துள்ளனர். அவர்களுடன்…
ஜப்பான் : மியான்மர்-தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பேரழிவின் அதிர்ச்சியிலிருந்து உலகம் இன்னும் மீளவில்லை. அதற்குள் ஜப்பான் ஒரு பெரிய…
சென்னை : அண்மைகாலமாக அதிமுக -பாஜக கூட்டணி குறித்த பேச்சுக்கள், அதே போல அதிமுக தலைமை மற்றும் பாஜக தலைமை…