புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த சிலமணி நேரங்களே ஆன ஆண் குழந்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் ஆலடிகொல்லை பேருந்துநிலையத்தில் அருகில் ஒரு நிழற்குடை உள்ளது, மேலும் மூதாட்டி ஒருவர் சென்றுள்ளார் அப்போது அங்கு ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது , உடனடியாக அந்த மூதாட்டி எங்கு சத்தம் கேட்கிறது என்று தேடி பார்த்துள்ளார், மேலும் நிழற்குடையின் உள்ளே ஒரு பையில் ஒன்று இருந்துள்ளது, மேலும் அந்த பையை திறந்து பார்த்தபோது அந்தப் பையில் பிறந்த சில மணி நேரங்களே ஆன ஒரு ஆண்குழந்தை இருந்துள்ளது.
இந்நிலையில் இதனால் பதற்றமடைந்த அந்த மூதாட்டி அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்களுக்கு குரல் எழுப்பியுள்ளார், அதற்கு பிறகு காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் குழந்தையை கைப்பற்றி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர் .
மேலும் அங்கு அந்த ஆண் குழந்தைக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது உடல் நலமாக உள்ளது, மேலும் இந்நிலையில் அந்த குழந்தைக்கு தேவையான அனைத்து பொருட்களையும் அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் வாங்கிக் கொடுத்தனர்.
மேலும் இதுகுறித்து கீரமங்கலம் காவல்துறையினர் யார் இந்த ஆண்குழந்தையை வீசி சென்றது என்று தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது, மேலும் பிறந்த சில மணி நேரங்கள் ஆன இந்த குழந்தையை தூக்கி வீசி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளி விவரப்பட்டியலில் 8-வது இடத்தில் இருப்பது என்பது ரசிகர்களுக்கு ஒரு…
உத்திர பிரதேஷ் : மாநிலம் ஹர்தோய் நகரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட முதல்வர் யோகி ஆதித்தியநாத் மேற்கு…
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 2025 ஆம் ஆண்டு சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்…
சென்னை : இன்றைய சட்டப்பேரவை நிகழ்வில் மாநில சுய ஆட்சி குறித்த முக்கிய தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்து…
ஹைதராபாத் : வரும் ஏப்ரல் 17-ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் அணியும்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…