புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த சிலமணி நேரங்களே ஆன ஆண் குழந்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் ஆலடிகொல்லை பேருந்துநிலையத்தில் அருகில் ஒரு நிழற்குடை உள்ளது, மேலும் மூதாட்டி ஒருவர் சென்றுள்ளார் அப்போது அங்கு ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது , உடனடியாக அந்த மூதாட்டி எங்கு சத்தம் கேட்கிறது என்று தேடி பார்த்துள்ளார், மேலும் நிழற்குடையின் உள்ளே ஒரு பையில் ஒன்று இருந்துள்ளது, மேலும் அந்த பையை திறந்து பார்த்தபோது அந்தப் பையில் பிறந்த சில மணி நேரங்களே ஆன ஒரு ஆண்குழந்தை இருந்துள்ளது.
இந்நிலையில் இதனால் பதற்றமடைந்த அந்த மூதாட்டி அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்களுக்கு குரல் எழுப்பியுள்ளார், அதற்கு பிறகு காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் குழந்தையை கைப்பற்றி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர் .
மேலும் அங்கு அந்த ஆண் குழந்தைக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது உடல் நலமாக உள்ளது, மேலும் இந்நிலையில் அந்த குழந்தைக்கு தேவையான அனைத்து பொருட்களையும் அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் வாங்கிக் கொடுத்தனர்.
மேலும் இதுகுறித்து கீரமங்கலம் காவல்துறையினர் யார் இந்த ஆண்குழந்தையை வீசி சென்றது என்று தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது, மேலும் பிறந்த சில மணி நேரங்கள் ஆன இந்த குழந்தையை தூக்கி வீசி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…