Madurai AIIMS [File Image]
சென்னை : மதுரை எய்ம்ஸ் கட்டுவதற்கு சுற்றுசூழல் அனுமதி அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு 1,977 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 222 ஏக்கரில் கட்டிமுடிக்க திட்டமிடப்பட்டது. இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டு ஆண்டுகள் கடந்தும் தற்போது வரை சுற்றுச்சுவர் தவிர வேறு ஏதும் கட்டப்படவில்லை. இந்நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கட்டுமான பணிகளுக்கான டெண்டர் அறிவிப்பை எய்ம்ஸ் நிர்வாகம் வெளியிட்டது. 33 மாதங்களில் கட்டி முடிக்க வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. கட்டுமான பணிகளுக்கான அடுத்தடுத்த நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது.
எய்ம்ஸ் கட்டுமான பணிகளுக்காக சுற்றுச்சூழல் அனுமதி பெற எய்ம்ஸ் நிர்வாகமானது தமிழக அரசிடம் கோரிக்கை வைத்து இருந்த நிலையில், சுற்றுசூழல் நிபுணர் குழு ஆய்வு மேற்கொண்டு தமிழக அரசுக்கு எய்ம்ஸ் மருத்துவ கட்டுமான பணிகளுக்கான நிபந்தனைகளை விதித்து பரிந்துரை செய்துள்ளது.
அதன்படி மதுரை எய்ம்ஸ் மருத்துவ கழிவுகளை பயோ கியஸாக மாற்றி மருத்துவமனை கேண்டினில் சமைக்க பயன்படுத்த வேண்டும். மருத்துவ கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை அமைக்க வேண்டும். மழை நீர் வடிகால் வசதி, குழந்தைகள் விளையாடுவதற்கான இடம் போன்றவற்றை அமைக்க வேண்டும். எலக்ட்ரிக் வாகன வசதிகள், கழிவு நீரை சுத்திகரித்து பயன்படுத்துதல் போன்ற அமைப்புகளை அமைக்க வேண்டும் எனக் கூறி நிபந்தனைகளுடன் மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகளுக்கு அனுமதி வழங்கலாம் என தமிழக சுற்றுச்சூழல் அமைப்பு தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டாம் கட்ட அமர்வு நடைபெற்று வருகிறது. இதில் திமுக சார்பில் அதன் நாடாளுமன்ற…
சென்னை : நேற்று முன்தினம் சென்னை கோட்டூர்புரம் அருகே நிகழ்ந்த இரட்டை கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
ஹைதிராபாத் : தெலுங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்புக்குப் பிறகு, பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு 42 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா நேற்றைய தினம்…
கலிபோர்னியா : சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) சுமார் 9 மாதங்களுக்கும் மேலாக…
காசா : இஸ்ரேல் ராணுவம் - ஹமாஸ் அமைப்பு போரானது சுமார் 17 மாதங்களாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஹமாஸ் ராணுவத்தை…
சென்னை : மகாராஷ்டிரா மாநிலம்நாக்பூரில் அவுரங்கசீப் சமாதியை அகற்றக் கோரி நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் நகரின் பல்வேறு பகுதிகளில்…