எந்த விசாரணைக்கும் தயார் என்று அடிக்கடி பேட்டியளிக்கும் முதலமைச்சர் தலைமைப் பொறியாளர் மாற்றம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடத் தயாரா ? என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,நகராட்சி நிர்வாக ஆணையரகத்தில் ‘ஸ்மார் சிட்டி’ உள்ளிட்ட ரூ.12,000 கோடி மதிப்புள்ள பணிகளைக் கவனித்து வரும், தலைமைப் பொறியாளர் நடராஜன் திடீரென்று மாற்றப்பட்டு, சட்ட விதிகளுக்கு மாறாக, சென்னை மாநகராட்சியில் ‘டம்மி’ பதவியில் அமர்த்தப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. நடராஜனுக்குப் பதில், சென்னை மாநகராட்சியிலிருந்து புகழேந்தி என்ற முதன்மை தலைமைப் பொறியாளர் நியமிட்டக்கப்பட்டுள்ளார்.
தனக்கு வேண்டியவருக்கு திரும்ப திரும்ப பதவி உயர்வு கொடுத்து, அமைச்சர் எஸ்.பி வேலுமணி அந்த பொறுப்பில் நியமித்திருக்கிறார். ரூ.17,000 கோடி திட்டங்களில் நடைபெற்றுள்ள ஊழலில் ‘பாதுகாப்புக் கவசம்’ அமைத்துக் கொள்ள உள்ளாட்சித் துறை அமைச்சர் இப்படி செயல்படுகிறார். எந்த விசாரணைக்கும் தயார் என்று அடிக்கடி கூறிவரும்,இந்த ரூ.17,000 கோடி திட்டம் குறித்தும் ,நடராஜன் மாற்றம் குறித்தும் முதலமைச்சர் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடத் தயாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…