இந்த குற்றசாட்டை நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார் – ஓபிஎஸ் ஆதரவாளர் அதிரடி

Default Image

முதலமைச்சர் ஸ்டாலினை, ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தாக எடப்பாடி பழனிசாமி கூறிய குற்றசாட்டை நிரூபித்தால் ஓபிஎஸ்-ம், நாங்களும் அரசியலை விட்டு விலக தயார் என ஜே.சி.டி.பிரபாகர் சவால். 

நேற்று சென்னையில், தடையை மீறி போராட்டம் நடத்தியதால் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ், ஜெயக்குமார், கே.பி.முனுசாமி உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் கைது செய்யப்பட்டு விடுவிக்கபட்டனர்.

அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், முதல்வர் ஸ்டாலின் ஓபிஎஸ்-ஐ பீ டீமாக வைத்து அதிமுகவை பிளக்க பார்க்கிறார்.ஸ்டாலின்- ஓ.பி.எஸ் நேற்று அரை மணி நேரம் சந்தித்து ஆலோசித்துள்ளனர் என குற்றம்சாட்டி இருந்தார்.

இதுகுறித்து ஓபிஎஸ் ஆதரவாளர் ஜே.சி.டி.பிரபாகர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்திருந்தார். அப்போது பேசிய அவர், முதலமைச்சர் ஸ்டாலினை, ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தாக எடப்பாடி பழனிசாமி கூறிய குற்றசாட்டை நிரூபித்தால், குற்றச்சாட்டை நிரூபித்தால் அண்ணன் ஓபிஎஸ்-ம், நாங்களும் அரசியலை விட்டு விலக தயார் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்