முன்னாள் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பேட்டி அளித்த போது பெண் பத்திரிகையாளரை கன்னத்தில் தட்டியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. அந்த பரபரப்புக்கு மத்தியில் நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி. சேகர் பத்திரிகை துறையில் வேலை பார்க்கும் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்தார்.
இதனால், எஸ்.வி. சேகருக்கு எதிராக கண்டங்கள் எழுந்தது. பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் எஸ்.வி. சேகர் மீது புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் சென்னை சைபர் க்ரைம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் அந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி எஸ்.வி.சேகர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இன்று இந்த வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் வந்தபோதும் எஸ்.வி. சேகர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பெண் பத்திரிக்கையாளர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாக தெரிவித்தார். காவல்துறை சார்பில் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவித்த நீதிபதி வழக்கை 2 வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
சென்னை : நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் டீசர் பிப்ரவரி 28, 2025 அன்று வெளியாகும்…
சென்னை : முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை தனது முகநூல் பக்கத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற முறையில், 2026-ஆம் ஆண்டு…
டெல்லி : இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1984 ஆம் ஆண்டு, அக்டோபர் 31 அன்று தனது சீக்கிய…
ராவல்பிண்டி : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபியின் 7-வது போட்டி இன்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா…
துபாய் : கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியும், இந்திய கிரிக்கெட் அணியும் மோதியது.…
சேலம் : பாமக கௌரவ தலைவரும், பாமக சட்டமன்ற குழுத் தலைவருமான ஜி.கே.மணியின் இல்ல திருமண விழா நாளை காலை…