விவாதத்திற்கு தயார்…மக்களே நீதிபதி, அவர்களே தீர்ப்பு வழங்கட்டும் – முதல்வர் பழனிசாமி சவால்

Published by
பாலா கலியமூர்த்தி

சிறப்பான ஆட்சி எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கு தமிழக அரசு முன்மாதிரியாக திகழ்வதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை ஆலந்தூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வளர்மதியை ஆதரித்து, பரப்புரை மேற்கொண்ட முதல்வர் பழனிசாமி, சிறப்பான ஆட்சி எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கு தமிழக அரசு முன்மாதிரியாக திகழ்கிறது என்றும் சட்ட – ஒழுங்கை சிறப்பாக நிர்வகிக்கக்கூடிய முதல் மாநிலம் எனவும் கூறியுள்ளார்.

திமுக ஆட்சியில் என்ன செய்தார்கள்? எதும் கிடையாது. நாட்டு மக்களையும் பார்க்கவில்லை, அரசாங்கத்தையும் பார்க்கவில்லை, எப்பொழுதும் வீட்டு மக்களை மட்டுமே தான் பார்க்கிறார்கள். அப்புறம் எப்படி தெரியும், நாடு எங்கே வளர்ச்சி பெறும் என குற்றசாட்டியுள்ளார்.

திமுக தலைவர் முக ஸ்டாலின் அரசு மீது பொய்யான குற்றசாட்டுகளை கூறி வருவதாகவும், அவர் சென்னை மேயராக இருந்தபோது எந்த பகுதியையும் கண்டுகொள்ளவில்லை எனவும் விமர்சனம் செய்துள்ளார். தற்போது முக ஸ்டாலின் ஆரம்பித்துள்ளார், அதில் ஊழல், இதில் ஊழல் என்று கூறி வருகிறார்.

முக ஸ்டாலின் கூறிய ஊழல் புகார் குறித்து அவருடன் நேரடி விவாதம் செய்ய தயார், ஆலந்தூர் பகுதிக்கே வாங்க மேடை அமைத்து விவாதம் நடத்தலாம் என்றும், என் மீதும், அமைச்சர்கள் மீதும் குற்றம் சொன்னால், அதற்கு சரியான பதிலை நான் சொல்கிறேன் எனவும் கூறிய முதல்வர், மக்கள் தான் நீதிபதி, அவர்களே தீர்ப்பு வழங்கட்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

டெல்டா மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.!

டெல்டா மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், தஞ்சாவூர். திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை,…

4 hours ago

“கேப்டனாக இருக்க பட்லரின் நேரம் முடிந்துவிட்டது என்று நினைக்கிறேன்” – முன்னாள் இங்கிலாந்து கேப்டன்கள்.!

பாகிஸ்தான் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான், 50…

4 hours ago

“2 நாட்களுக்கு முன் சமாதான தூது விட்டார் சீமான்” – நடிகை விஜயலட்சுமி வெளியிட்ட பரபரப்பு வீடியோ!

சென்னை : சீமான் மீதான பாலியல் புகார் வழக்கில் நேரில் ஆஜராகுமாறு, அவரது சென்னை இல்லத்தில் போலீஸ் சம்மன் ஒட்டினர்.…

5 hours ago

பாடகர் யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதியா? விளக்கம் அளித்த மகன்!

சென்னை : பழம்பெரும் பின்னணிப் பாடகர் கே.ஜே. யேசுதாஸ், வயது மூப்பு தொடர்பான உடல்நலக் குறைபாடுகள் காரணமாக சென்னையில் மருத்துவமனையில்…

7 hours ago

சீமான் வீட்டு களோபரம் : “நாட்டை பாதுகாத்தவருக்கு இந்த நிலைமையா?” அமல்ராஜ் மனைவி வேதனை!

சென்னை : நடிகை வழக்கில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நேரில் ஆஜராகவில்லை என்று சென்னை வளசரவாக்கம் போலீசார்,…

7 hours ago

போட்டியில் வென்ற மழை.! பாகிஸ்தான் – வங்கதேசத்திற்கு கிடைத்த ஆறுதல் பாய்ண்ட்.!

பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில், இன்று நடைபெற இருந்த பாகிஸ்தான்-வங்கதேசம் இடையிலான 9வது போட்டி கைவிடப்பட்டது. ராவல்பிண்டி பகுதியில்…

8 hours ago