கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உடலை பெற்றோர் இல்லாமல் மறுகூராய்வு செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மாணவி உடல் பிற்பகல் ஒரு மணிக்கு மறுகூராய்வு செய்யப்படும் என மருத்துவமனை டீன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மறுகூராய்வு செய்வது தொடர்பான நோட்டிஸ், மாணவியின் பெற்றோர் வீட்டில் ஒட்டப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின்படி, மறு உடற்கூராய்வு செய்யும் இடத்தில் பெற்றோர் இருக்கலாம் என்றும் நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கள்ளக்குறிச்சியில் உயிரிழந்த மாணவியின் மறு உடற்கூராய்வை பெற்றோர் இல்லாமலே நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. உடல் மறு பிரேத பரிசோதனை செய்யும்போது பெற்றோர் வந்தால் அனுமதிக்க வேண்டும் எனவும் நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
பெற்றோர் எங்கு இருக்கிறார்கள் என தெரியவில்லை என காவல்துறை தரப்பில் நீதிபதியிடம் முறையீடு செய்த நிலையில், பெற்றோர் இல்லாமலே நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே, உச்சநீதிமன்றம் தடை உத்தரவு எதுவும் விதிக்காததால் மறுஉடற் கூராய்வு நடைமுறையை தொடங்க வாய்மொழியாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பிற்பகல் ஒரு மணிக்கு மாணவியின் உடல் மறுகூராய்வு செய்யப்பட உள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…