சின்னம் மாறி அச்சிடப்பட்டதால் 3 ஊராட்சிகளில் 30ஆம் தேதி மறுவாக்குப்பதிவு!

Published by
மணிகண்டன்
  • புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதிக்கு உட்பட்ட 3 ஊராட்சிகளில் வார்டுஒன்றிய குழு உறுப்பினர் போட்டிக்கு சுயேட்சையாக போட்டியிட்ட சேகர் என்பவரது சின்னம் மாறி இருந்தது.
  • இதனால், வரும் 30ஆம் தேதி 3 ஊராட்சிகளில் உள்ள 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் நேற்று 27 மாவட்டங்களில் உள்ள 156 ஒன்றியத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணி முதல் நடைபெற்ற தேர்தல் மாலை 5 மணி சில இடங்களில் டோக்கன் வழங்கப்பட்டு நீண்ட நேரம் காத்திருந்தும் வாக்களித்தனர். இந்த தேர்தலில் சில வாக்குச்சாவடியில் பிரச்னை ஏற்பட்டு பரபரப்பானது.

இதில் புதுக்கோட்டை மாவட்டம் விரலைமலை பகுதிக்கு  உட்பட்ட 3 ஊராட்சிகளான கோங்குடிபட்ட, பாக்குடி, பேரம்பூர் உட்பட்ட பகுதியில், 15வது வார்டு ஒன்றியம் குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட சுயேட்ச்சை வேட்பாளர் சேகர் என்பவருக்கு ஸ்பேனர் சின்னம் ஒதுக்கப்பட்டது. ஆனால் வாக்குசீட்டில் அவரது பெயருக்கு அருகே ஸ்க்ரூ சின்னம் தவறுதலாக அச்சிடப்பட்டது.

இதனால் சேகர், தேர்தல் அதிகாரிகளுடன் புகார் செய்திருந்தார். இதனை அடுத்து,  சேகர் போட்டியிட்ட அந்த 3 ஊராட்சிகளில் உள்ள 13 வாக்குசாவடிகளில் வரும் 30 ஆம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தற்போது அறிவிக்கப்பட்டது.

Published by
மணிகண்டன்

Recent Posts

விராட், ரோஹித் எல்லாம் ஓரம் போங்க! இன்ஸ்டாவில் சம்பவம் செய்த ஹர்திக் பாண்டியா!

விராட், ரோஹித் எல்லாம் ஓரம் போங்க! இன்ஸ்டாவில் சம்பவம் செய்த ஹர்திக் பாண்டியா!

துபாய் : இன்ஸ்டாகிராம் தளத்தில் கிரிக்கெட் வீரர்களுக்கு இருக்கும் வரவேற்பை பெற்றி சொல்லியே தெரியவேண்டாம். அதிலும் உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் விராட்…

1 hour ago

உங்களை கல்யாணம் பண்ண எப்படி மாறனும்? பதில் சொல்லி ரசிகரை அழவைத்த மாளவிகா!

சென்னை : சமூக வலைத்தளங்களில் மாளவிகா மோகனன் ஒரு போஸ்ட் ஒன்றை போட்டாலே போதும் லைக்குகளும், கமெண்டுகளும் மலைச்சாரல் போல…

2 hours ago

3வது மொழியை கட்டாயமாக திணிப்பது ஏன்? தர்மேந்திர பிரதானுக்கு அன்பில் மகேஷ் கேள்வி!

சென்னை : மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெயர் தான் இப்போது அரசியல் வட்டாரத்தில் தலைப்பு செய்திகளில் இடம்…

3 hours ago

விரைவில் ரஷ்யா – உக்ரைன் போர் முடிவு? ஜெலன்ஸ்கியை அழைக்கும் டொனால்ட் டிரம்ப்!

ஜெட்டா : ரஷ்யா -உக்ரைன் போர் என்பது இன்னும் முடிவுக்கு வராதா ஒன்றாக இருந்து வரும் சூழலில், போரை முடிவுக்கு…

5 hours ago

LIVE : கோடை கனமழை முதல்…தர்மேந்திர பிரதான் விவகாரம் வரை!

சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக…

6 hours ago

நதிகள், வடிகால்கள் அருகே வாழ்வோருக்கு புற்றுநோய் எச்சரிக்கை! ICMR -ஆய்வில் வந்த அதிர்ச்சி தகவல்!

டெல்லி : இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் (ICMR) இந்த ஆண்டு நடத்திய மருத்துவ ஆய்வில் நதிகள் மற்றும் திறந்த…

7 hours ago