தமிழகத்தில் நேற்று 27 மாவட்டங்களில் உள்ள 156 ஒன்றியத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணி முதல் நடைபெற்ற தேர்தல் மாலை 5 மணி சில இடங்களில் டோக்கன் வழங்கப்பட்டு நீண்ட நேரம் காத்திருந்தும் வாக்களித்தனர். இந்த தேர்தலில் சில வாக்குச்சாவடியில் பிரச்னை ஏற்பட்டு பரபரப்பானது.
இதில் புதுக்கோட்டை மாவட்டம் விரலைமலை பகுதிக்கு உட்பட்ட 3 ஊராட்சிகளான கோங்குடிபட்ட, பாக்குடி, பேரம்பூர் உட்பட்ட பகுதியில், 15வது வார்டு ஒன்றியம் குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட சுயேட்ச்சை வேட்பாளர் சேகர் என்பவருக்கு ஸ்பேனர் சின்னம் ஒதுக்கப்பட்டது. ஆனால் வாக்குசீட்டில் அவரது பெயருக்கு அருகே ஸ்க்ரூ சின்னம் தவறுதலாக அச்சிடப்பட்டது.
இதனால் சேகர், தேர்தல் அதிகாரிகளுடன் புகார் செய்திருந்தார். இதனை அடுத்து, சேகர் போட்டியிட்ட அந்த 3 ஊராட்சிகளில் உள்ள 13 வாக்குசாவடிகளில் வரும் 30 ஆம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தற்போது அறிவிக்கப்பட்டது.
சென்னை : ஆளுநர் ஆர். என். ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா…
சென்னை : இன்று சென்னையில் நடைபெற்ற இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.…
சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் ஆளுநர் ரவி…
சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர்…
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…
சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” மிகப்பெரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது.…