டி.டி.வி.தினகரன் வீட்டு நாயாக இருந்தோம்… அதிமுக முன்னாள் அமைச்சர் பரபரப்பு.!

Published by
மணிகண்டன்

T.T.V.Dhinakaran : முன்பு உங்கள் வீட்டு காவல் நாயாக இருந்தோம் என டிடிவி.தினகரனுக்கு ஆர்.பி.உதயகுமார் பதிலடி.

மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் திமுக சார்பில் தங்க தமிழ்ச்செல்வன், அதிமுக சார்பில் நாராயணசாமி, பாஜக கூட்டணியில் அமமுக சார்பில் டிடிவி.தினகரன் ஆகியோர் களமிறங்குகின்றனர். டி.டி.வி.தினகரன், தங்கத்தமிழ்செல்வன் ஆகிய இருவருமே அதிமுக கட்சியில் இருந்து பிரிந்தவர்கள் என்பதால் இந்த தேர்தல் களம் மிக சுவாரஸ்யமாகவும், பிரச்சார களம் மிக தீவிரமாகவும் இருக்கிறது.

முன்னதாக தேனி தொகுதி வேட்பாளர் டிடிவி.தினகரன் பிரச்சாரம் செய்கையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை பபூன் (கோமாளி) என்று கூறியதாகவும், எடப்பாடி பழனிசாமியை அன்றே நினைத்து இருந்தால் அரசியலில் இருந்து காலி செய்து இருப்போம் என்றவாறு பேசியிருந்தார் என்று கூறப்படுகிறது.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக, கடந்த 15 ஆண்டுகளாக தேனி பக்கமே வராத டிடிவி.தினகரன். தற்போது தேனி தொகுதியில் போட்டியிடுகிறார். 10 ஆண்டுகளாக அம்மா உத்தரவின் பேரின் கட்சியிலிருந்து விலக்கி வைக்கப்பட்டு இருந்தார். 20 ரூபாய் டோக்கன் கொடுத்து R.K.நகரில் மக்களை ஏமாற்றி வெற்றி பெறச் செய்தவர். அடுத்ததாக கோவில்பட்டியில் போட்டுபோட்டு தோல்வி அடைந்தார். அவரை மக்கள் புறக்கணித்தனர். தற்போது கடைசி புகலிடமாக தேனி வந்துள்ளார். இங்கேயும் அவரை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

முன்னதாக, இரட்டை இலை சின்னத்தை காண்பது தேனி தொகுதியில் தினகரன் வெற்றி பெற்று இருந்தார். ஆனால் இப்போது இரட்டை இலை எங்கள் பக்கம் இருக்கிறது. அவர் எங்களை பபூன் என்று விமர்சிக்கிறார். ஆமாம், நான் பஃபூன் தான். அனைவரையும் சிரிக்க வைக்கும் பபூன். ஆனால் டிடிவி தீமை விளைவிக்கும் வில்லன். கிளைமேக்ஸில் அவர்தான் தோல்வியடைவார். அம்மா இருக்கும் வரையில் நாங்கள் அவருக்கு பயந்தோம். அது உண்மைதான்.

அம்மா இருக்கும்போது அவரை காண்பித்து நீங்கள் எங்களை பயமுறுத்தி வைத்திருந்தீர்கள். அப்போது உங்கள் பூச்சாண்டிக்கு நாங்கள் பயந்து இருந்தோம். உங்கள் வீட்டு காவல் நாயாக நாங்கள் இருந்துள்ளோம். ஆனால் இப்போது நாங்கள் சுதந்திர காற்றை சுவாசிக்கிறோம். சீரும் சிங்கங்களாக மாறி உள்ளோம்.

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் எங்கள் கடம்பூர் ராஜு அண்ணன் உங்களை அந்த தொகுதியில் தோக்கடித்தார். இப்போது, நாங்கள் உங்களுக்கு பயப்பட மாட்டோம். இப்போது நாங்கள் எங்கு சென்றாலும் எங்களுக்கு மரியாதை இருக்கிறது. புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா, புரட்சித்தமிழர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தலைமையில் சுதந்திர காற்றை சுவாசித்து வருகிறோம். தேனி தொகுதியில் அதிமுக வேட்பாளர் நாராயணசாமி இங்கு பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என ஆர்.பி.உதயகுமார் உரையாற்றினார் .

Recent Posts

அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து சரிந்த பெங்களூர்.., பஞ்சாப் அணிக்கு இது தான் இலக்கு.!

பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…

1 hour ago

”அடிதடி, ரத்தம் எதுவும் என்ன விட்டு போகல”…, கவனம் ஈர்க்கும் ‘ரெட்ரோ’ டிரைலர்.!

சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…

5 hours ago

RCB vs PBKS : குறுக்கே வந்த கௌசிக்.., மழை காரணமாக டாஸ் தாமதம்.!

பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…

5 hours ago

என்னது..!! செல்பாேன் கட்டணம் மீண்டும் உயர்வா.? ஜியோ, ஏர்டெல் பயனர்களுக்கு அதிர்ச்சி.!

டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…

5 hours ago

”வென்றால் மாலை.., இல்லை என்றால் பாடை” – சீமானின் பரபரப்பு பேச்சு.!

சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…

7 hours ago

க்ரீன் சிக்னல் கொடுத்த அர்ஜுன்.., 13 வருட வெளிநாட்டு காதலனை மணக்க போகும் அஞ்சனா.!

சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…

7 hours ago