சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 828 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்த வண்ணம் இருக்கிறது. நேற்று ஒரே நாளில் மட்டுமே 716 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், தமிழகத்தில் இதுவரை 8,718 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், நேற்று சென்னையில் மட்டும் 510 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால், அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,882 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், சென்னையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் மண்டலவாரியான பட்டியலை சென்னை மாநகராட்சி தற்போது வெளியிட்டுள்ளது. இதில், சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் தான் 828 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதுதான் சென்னையில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து, கோடம்பாக்கத்தில் 796, திரு.வி.க நகரில் 622, தேனாம்பேட்டையில் 522, வளசரவாக்கம் 426, அண்ணா நகர் 405 போன்ற மண்டலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாகவுள்ளது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…