15 மண்டலங்களில் ராயபுரம் தான் முதலிடம் – சென்னை மாநகராட்சி.!

Default Image

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 828 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்த வண்ணம் இருக்கிறது. நேற்று ஒரே நாளில் மட்டுமே 716 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், தமிழகத்தில் இதுவரை 8,718 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், நேற்று சென்னையில் மட்டும் 510 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால், அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,882 ஆக உயர்ந்துள்ளது. 

இந்நிலையில், சென்னையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் மண்டலவாரியான பட்டியலை சென்னை மாநகராட்சி தற்போது வெளியிட்டுள்ளது. இதில், சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் தான் 828 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதுதான் சென்னையில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து, கோடம்பாக்கத்தில் 796, திரு.வி.க நகரில் 622, தேனாம்பேட்டையில் 522, வளசரவாக்கம் 426, அண்ணா நகர் 405 போன்ற மண்டலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாகவுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்