அடுத்த மாதத்தில் தமிழகம் முழுவதிலும் நடமாடும் ரேஷன் கடைகள் தொடங்கப்பட்ட உள்ளதாக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள் தெரிவித்துள்ளார்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் உள்ளது. இன்று அங்கு ஆய்வு மேற்கொண்ட கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது தமிழகத்தில் உள்ள 4449 கூட்டுறவு சங்கங்களும் கணினி மயமாக்கப்பட்டதால் விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி தேவையான பொருட்கள் மற்றும் உரங்கள் கிடைத்து வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் நகர்ப்புறங்களில் ரேஷன் கடைகளில் கூட்டம் அதிகரிப்பதும் வாடகைக்கு கடைகள் கிடைக்காததையும் கருத்தில் கொண்டு நடமாடும் ரேஷன் கடைகள் கொண்டுவர இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ரேஷன் கடைகளை மூடுவதற்கு திட்டமிடுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது போகிற போக்கில் குண்டை போட்டு விட வேண்டாம் என பதிலளித்துள்ளார். மேலும் 13 லட்சம் கிஸான் அட்டை தாரர்களுக்கு தமிழக அரசு தடையின்றி கடன் வழங்கி வருவதாகவும், அடுத்த மாதத்தில் தமிழகத்தில் நடமாடும் ரேஷன் கடைகள் நிச்சயம் தொடங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பெங்களூர் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே ஆர்சிபி ரசிகர்கள் "ஈ சாலா கப் நம்தே ...ஈ சாலா கப்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர் விவகாரத்தில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வரையில் முறைகேடு நடைபெற்று இருக்கலாம் எனக் அமலாக்கத்துறை கூறிய…
கலிபோர்னியா : விண்வெளியில் சிக்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை பத்திரமாக மீட்க டிராகன் விண்கலம் கடந்த மார்ச்…
டெல்லி : இசைஞானி இளையராஜா இம்மாதம் (மார்ச்) 8ஆம் தேதியன்று லண்டனில் தனது முதல் சிம்பொனி இசையை அரங்கேற்றினார். 34…
சென்னை : அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான விடாமுயற்சி படம் வசூல் ரீதியாக தோல்வி அடைந்த நிலையில், அடுத்ததாக மாஸ் கம்பேக்…
டெல்லி : இந்திய அமலாக்கத்துறையானது நாட்டில் சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை நடைபெறுவதை தடுக்கும் ஒரு அரசாங்க விசாரணை அமைப்பு ஆகும். இந்த…