இடமாற்றம் செய்யப்படுகிறார்களா?? ரேஷன் கடை ஊழியர்கள்!

Default Image

தமிழகத்தில்  கொரோனோ பாதிப்புக் காரணமாக முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நிலையில் அவர்களுக்கு இலவச அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை வழங்கும் வகையிலும் தொற்று பரவுவதை தடுக்கும் வித்தத்தல் ஊரடங்கு காலங்களிலும் எவ்வித தொய்வின்றி ரேசன் பொருட்களை மக்களிடம் கடை ஊழியர்கள் சேர்த்து வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா  நிவாரணப் பொருட்களை வழங்கி வரும்  ரேஷன் கடை ஊழியர்களை இட மாற்றம் செய்வதாகவும்,இம்மாற்ற நடவடிக்கையை தவிர்க்க வேண்டும் என்று கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் பாலசுப்ரமணியம் வலிறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் தமிழகத்தில் உள்ள அனைத்து மண்டல இணை பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது: கொரோனா  வைரஸ் தொற்று காரணமாக, ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ள போது தமிழக அரசு அறிவிக்கின்ற சிறப்பு திட்டங்களை எல்லாம் செயல்படுத்தும் பணியையும், கார்டுதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் நிவாரணத் தொகை வழங்கும் பணியையும், ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இத்தகைய பணி நடைபெற்று கொண்டிருக்கிறது தேவை ஏற்படும் இடங்களை தவிர்த்து, மற்ற ரேஷன் கடை ஊழியர்களை இடமாற்றம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று அதில் கூறியுள்ளார்.

மேலும் அவர்  தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளில் இருந்து ரேஷன் கடைகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்ல, லாரி உரிமையாளர்களுடன் ஒப்பந்தம் செய்யும்போது, ஏற்றுக்கூலி மற்றும் இறக்கும் கூலி சேர்க்கப்படுகிறது. கடையில் பொருட்கள் இறக்கும் ஒவ்வொரு முறையும் ஊழியர்களிடம் கட்டாயப்படுத்தி கூலி வசூலிப்பதாக புகார் வந்து உள்ளது. இறக்கு கூலி வசூலிப்பதை தடுத்து நிறுத்தவும் வேண்டுகோள் விடுத்து அதில் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 30042025
ramadoss
Punjab won the toss and elected to field
Rajinikanth