ராம்விலாஸ் பஸ்வான் சமூக நீதி அரசியல் களத்தில் முன்னோடியாகத் திகழ்ந்தவர் – சீமான்

மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் மறைவுக்கு சீமான் இரங்கல்.

மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் மறைவுக்கு சீமான் இரங்கல்.

மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சி தலைவருமாகிய ராம்விலாஸ் பாஸ்வான் உடல்நல குறைவால் மருத்துவமனையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது டிவிட்டர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதில், ஐயா பஸ்வான் அவர்கள் சமூக நீதி அரசியல் களத்தில் முன்னோடியாகத் திகழ்ந்தவர். ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தவர். வன்கொடுமைத் தடுப்புச் சட்டமியற்றப்படக் காரணகர்த்தாவாக இருந்தவர் என அந்த பதிவில் தெரிவித்துள்ளார். இதோ…

unknown node