அனைவரும் வியக்க வைத்த” ஊழலுக்கு” வெகுமதியோ என்னவோ…?ராமதாஸ் கிண்டல்..!

Default Image

பாமக நிறுவனர் ராமதாஸ் அமைச்சர் விஜயபாஸ்கரை கிண்டல் செய்யும் விதமாக பதிவு ஒன்றை தெரிவித்துள்ளார்.

 

அதில் குட்கா ஊழலில் சிபிஐ சோதனைக்கு ஆளான அமைச்சர் விஜயபாஸ்கருக்கு அதிமுகவில் புதிய பதவி கிடைத்த செய்தி அனைவரும் வியக்கும் வகையில் ஊழல் செய்ததற்கான வெகுமதியோ என்னவோ?என்று கேலி செய்து தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

குட்கா ஊழல் குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர் விஜயபாஸ்கர்,முன்னாள் ஆணையர் ஜார்ஜ்,இன்னாள் ஆணையர் டி.கே ராஜேந்திரன் உள்ளிட்டோர்களின் வீடுகளில் சிபிஜ சோதனை நடந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று தலைமை கழக அறிவிப்பில் புதிய நிர்வாகிகளை நியமித்து அறிக்கை வெளியிட்டது.அதில் அதிமுகவின் அமைப்பு செயலாளராக அமைச்சர் விஜயபாஸ்கர் நியமிக்கப்பட்டார்.

மற்றும் அதிமுக சட்ட அலோசகர் பி.எச் பாண்டியன் மற்றும் முன்னாள் அமைச்சர் பாப்பா சுந்தரம் அமைப்பு செயலாளராக நியமிக்கப்பட்டன்ர் இந்த நிலையில்

இந்த நியமனம் குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அமைச்சர் விஜயபாஸ்கரை கிண்டல் செய்யும் விதமாக பதிவிட்டுள்ளார்.மேலும் இன்று நியமனம் தொடர்பாக முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றார் அமைச்சர் விஜயபாஸ்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்