அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இன்று மதியம் 12.30மணியளவில் குழந்தை ராமர் சிலை திறக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்படுகிறது. பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு அரசியல் பிரபலங்கள், திரை பிரபலங்கள் என பலர் ராமர் கோவில் விழாவில் கலந்துகொண்டுள்ளனர்.
தனியார் கோயில்களில் நேரலை – போலீசார் அனுமதி தேவையில்லை!
இந்த விழாவை நேரடியாக காண இந்தியாவில் பல்வேறு இடங்களில் எல்இடி திரைகள், பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜைகள் , அன்னதானம் என பல நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழா காரணமாக மத்திய அரசு அலுவலகங்கள், வங்கிகள் என பல்வேறு நிறுவனங்கள் அரை நாள் விடுமுறையை அறிவித்துள்ளன.
அயோத்தி ராமர் கோயில் விழாவை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது என பாஜகவினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வந்தனர். ஆனால், சிறப்பு பூஜைகள் நடத்த தமிழக அரசு எந்த தடையும் விதிக்கவில்லை என்றும், பொய் செய்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்தது.
இந்த நிலையில், தமிழக அரசு இன்று கோயில்களில் சிறப்பு பூஜைகளுக்கு அனுமதி மறுக்கிறது என பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்து பாஜக சார்பில் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வு தமிழக அரசு தரப்பு வாதங்களை கேட்டுக்கொண்டது.
தமிழக அரசு சார்பில் வாதிடுகையில், தமிழகத்தில் அரசு இன்று ராமர் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்த எந்த தடையும் விதிக்கவில்லை என கூறியது. அதனை பதிவு செய்துகொண்ட நீதிபதி, இந்த வழக்கில் எதிர்மனுதாரர் யார் என வழக்கு தொடர்ந்தவர்கள் குறிப்பிடவில்லை என்றும், யார் எந்த இடத்தில் அனுமதி மறுத்தார்கள் என்றும் விளக்கம் கேட்டு வழக்கு தொடர்ந்த பாஜக தரப்பிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அதே போல , தமிழக அரசு இந்த விவகாரம் குறித்து முழு விளக்கத்தை, அதாவது , எந்த இடத்தில் எதற்காக யார் சிறப்பு பூஜைகளுக்கு அனுமதி மறுத்தார்கள், அதற்கான காரணம் என்ன என்பது பற்றிய விளக்கத்தை வரும் வெள்ளிக்கிழமைக்குள் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் வழக்கை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…