ராமர் கோயில் விழா… சிறப்பு பூஜைகள் விவகாரம்.! தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.!

Published by
மணிகண்டன்

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இன்று மதியம் 12.30மணியளவில் குழந்தை ராமர் சிலை திறக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்படுகிறது. பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு அரசியல் பிரபலங்கள், திரை பிரபலங்கள் என பலர் ராமர் கோவில் விழாவில் கலந்துகொண்டுள்ளனர்.

தனியார் கோயில்களில் நேரலை – போலீசார் அனுமதி தேவையில்லை!

இந்த விழாவை நேரடியாக காண இந்தியாவில் பல்வேறு இடங்களில் எல்இடி திரைகள், பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜைகள் , அன்னதானம் என பல நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழா காரணமாக மத்திய அரசு அலுவலகங்கள், வங்கிகள் என பல்வேறு நிறுவனங்கள் அரை நாள் விடுமுறையை அறிவித்துள்ளன.

அயோத்தி ராமர் கோயில் விழாவை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது என பாஜகவினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வந்தனர். ஆனால், சிறப்பு பூஜைகள் நடத்த தமிழக அரசு எந்த தடையும் விதிக்கவில்லை என்றும், பொய் செய்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்தது.

இந்த நிலையில், தமிழக அரசு இன்று கோயில்களில் சிறப்பு பூஜைகளுக்கு அனுமதி மறுக்கிறது என பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்து பாஜக சார்பில் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வு தமிழக அரசு தரப்பு வாதங்களை கேட்டுக்கொண்டது.

தமிழக அரசு சார்பில் வாதிடுகையில், தமிழகத்தில் அரசு இன்று ராமர் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்த எந்த தடையும் விதிக்கவில்லை என கூறியது. அதனை பதிவு செய்துகொண்ட நீதிபதி, இந்த வழக்கில் எதிர்மனுதாரர் யார் என வழக்கு தொடர்ந்தவர்கள் குறிப்பிடவில்லை என்றும், யார் எந்த இடத்தில் அனுமதி மறுத்தார்கள் என்றும் விளக்கம் கேட்டு வழக்கு தொடர்ந்த பாஜக தரப்பிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

அதே போல , தமிழக அரசு இந்த விவகாரம் குறித்து முழு விளக்கத்தை, அதாவது , எந்த இடத்தில் எதற்காக யார் சிறப்பு பூஜைகளுக்கு அனுமதி மறுத்தார்கள், அதற்கான காரணம் என்ன என்பது பற்றிய விளக்கத்தை வரும் வெள்ளிக்கிழமைக்குள் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் வழக்கை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Recent Posts

இப்படியா விளையாடுவீங்க? பாகிஸ்தானை விளாசி தள்ளிய ஷோயிப் அக்தர்!

பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து பாகிஸ்தான் அணி வெளியேறியது என்பது ரசிகர்களுக்கு ஒரு சோகமான விஷயமாக அமைந்துள்ளது.…

22 minutes ago

எங்கள் தலைவரை போல பேண்ட் சட்டை அணிந்து கொண்டு நடிக்கிறீர்கள்…முதல்வரை சாடிய ஆதவ் அர்ஜுனா !

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி 1 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில்,  கட்சியின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா…

1 hour ago

உங்கள் குழந்தைகளுக்கு மட்டும் மூன்றுமொழி …வாட் ப்ரோ? விஜய் ஸ்டைலில் பதிலடி கொடுத்த அண்ணாமலை!

சென்னை :  தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா இன்று மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் நடைபெற்றது. அதில்…

2 hours ago

AFG vs ENG: சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து வெளியேறப்போவது யார்? ஆப்கானிஸ்தான் பேட்டிங்…

பாகிஸ்தான் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் குரூப் பி பிரிவின் லீக் ஆட்டத்தில், லாகூரின் கடாபி மைதானத்தில்…

2 hours ago

“தவெக பண்ணையார்களுக்கான கட்சி இல்லை., 2026-ல் வரலாறு படைப்போம்!” – விஜய் பேச்சு.

காஞ்சிபுரம் : தமிழக வெற்றிக் கழக கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா இன்று காஞ்சிபுரம் மாவட்டம் பூஞ்சேரியில் நடைபெற்றது.…

2 hours ago

“வாட் ப்ரோ? இட்ஸ் வெரி ராங் ப்ரோ” திமுக, பாஜகவை வச்சி செய்த விஜய்!

சென்னை : மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவில் பேசிய தவெக…

3 hours ago