மாநிலங்களவை தேர்தல் : வைகோ, திமுக வேட்பாளர்கள் மனுதாக்கல்

Default Image

சட்டப்பேரவை செயலரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார் மதிமுக பொதுசெயலாளர் வைகோ.

ஜூலை 18 ஆம் தேதி தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது.எனவே  திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வழக்கறிஞர் வில்சன் ,தொ.மு.ச சண்முகம் போட்டியிடுகின்றனர்.திமுக போட்டியிடும் மூன்று தொகுதிகளில் ஒரு தொகுதி மதிமுகவிற்கு ஒதுக்கப்பட்ட நிலையில்  மதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ போட்டியிடுகிறார்.

இதனால் இன்று தலைமைச் செயலகம் சென்ற வைகோ திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.இதன் பின் சட்டப்பேரவை செயலரிடம் ஸ்டாலின் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தார் மதிமுக பொதுசெயலாளர் வைகோ.மேலும் திமுக வேட்பாளர்கள் வில்சன் ,தொ.மு.ச சண்முகம் ஆகியோரும் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்