மாநிலங்களவைத் தேர்தல் – நாளை வேட்புமனு தாக்கல்

Default Image

அதிமுக சார்பில் மாநிலங்களவைத்  தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் நாளை  வேட்புமனு தாக்கல் செய்கின்றனர்.

தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை பதவிகளுக்கான தேர்தல் வரும் மார்ச் 26 -ஆம் தேதி நடைபெறுகிறது.அதிமுக சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டது. அதன்படி கே.பி.முனுசாமி,தம்பிதுரை மற்றும் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

அதிமுக கூட்டணியில் தங்களுக்கு மாநிலங்களவை தேர்தலில் வாய்ப்பு வழங்கவேண்டும் என்ற தேமுதிகவின் கோரிக்கை நிராகரிப்பட்டது.இந்நிலையில் அதிமுக வேட்பாளர்கள் தம்பிதுரை ,கே.பி.முனுசாமி மற்றும் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் நாளை  வேட்புமனுவை தாக்கல் செய்கின்றனர்.

 
 
 
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்